பாண்டிங்கை தொடர்ந்து கில்கிறிஸ்ட்


வெஸ்ட் இண்டீசில் நடக்கும் கரீபிய பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) தொடரில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை தொடர்ந்து, கில்கிறிஸ்ட்டும் இரண்டாவது வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், 41. கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

இதன் பின் ஆண்டு தோறும் இந்தியவில் நடக்கும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக பங்கேற்றுவருகிறார். 

இவர் தற்போது வெஸ்ட் இண்டீசில் முதல் முறையாக நடக்கவுள்ள சி.பி.எல்., தொடரில் பங்கேற்க, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை தொடர்ந்து இரண்டாவது வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

இத்தொடர் வரும் ஜூலை 29 முதல் ஆக., 26 வரை நடக்கவுள்ளது. இதில், ஆன்டிகுவா அண்டு பார்புடா, பார்படாஸ், கயானா, ஜமைக்கா, டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. 

இதில் 90க்கு மேல் சர்வதேச வீரர்களை ஒப்பந்தம் செய்ய சி.பி.எல்., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

இது குறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில்,""சி.பி.எல்., தொடரில் பங்கேற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்த கிரகத்தின் அழகிய இடங்களில் ஒன்றான வெஸ்ட் இண்டீசில் மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான். முன்பு இங்கு போட்டியில் பங்கேற்ற நினைவுகள் என் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை,''என்றார். 

0 comments:

Post a Comment