டெல்லி டெஸ்ட் - தெண்டுல்கருக்கு கடைசி போட்டியாக இருக்குமா?


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடி வருகிறார். 

தற்போது டெல்லியில் நடைபெறும் டெஸ்ட் போட்டி தான் தாய் மண்ணில் தெண்டுல்கர் மோதும் கடைசி போட்டியாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

காரணம் ஐ.சி.சி. அட்டவணைப்படி அடுத்த ஒரு ஆண்டுக்கு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரும் கிடையாது. அடுத்த மாதம் தெண்டுல்கர் 40 வயதை எட்டுகிறார். 

எனவே டெல்லி டெஸ்ட் தெண்டுல்கருக்கு இந்திய மண்ணில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இதுபற்றி முன்னாள் கேப்டன் கவாஸ்கரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:- 

டெல்லி போட்டி தான் தெண்டுல்கரின் கடைசி போட்டி என்று யாரும் சொல்லி விட முடியாது. அது தான் அவரின் கடைசி போட்டி என்று யாருக்கும் தெரியாது. 

2006-07- முதல் அவரின் ஓய்வு பற்றிய பேச்சு வந்து கொண்டு இருக்கிறது என்றாலும் அவர் விளையாடிக் கொண்டு இருக்கிறார். எனவே கடைசிப் போட்டி பற்றி அவருக்கு மட்டுமே தெரியும். 

இவ்வாறு கவாஸ்கர் கூறினார். 

0 comments:

Post a Comment