நேபாளத்தின் கிரிக்கெட் தூதுவரானார் தோனி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நோபாளத்தின் கிரிக்கெட் தூதுராக நியமிக்கப்பட்டார். இந்திய எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தோனி, தற்போது நேபாள தலைநகர் காட்மாண்டுவிற்கு தனது மனைவி சாக்ஷியுடன் சென்றுள்ளார்.

அவர் அங்குள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுடன் விளையாட்டு நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார்.
பின், தோனி நேபாளத்தின் தூதுவராக நியமிக்கபட்டார்.

இது நேபாளத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி சுபாஷ் நிரவ்லா தெரிவித்தார்.

தோனி கூறிகையில்,"" கிரிக்கெட் தூதுவராக நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இளைஞர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவது போல விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும் அது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் கைகொடுக்கும். கிரிக்கெட் விளையாட்டு தற்போது நேபாளத்தில் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது.

விரைவில் சர்வதேச அரங்கில் ஒரு சிறந்த அணியை காண அதிக ஆவலாக உள்ளேன். என்றார்.

0 comments:

Post a Comment