தோனியின் ரசிகர்கள் ஏமாற்றம்

லடாக் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே தோனியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால், உள்ளே செல்ல ராணுவம் அனுமதி அளிக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்திய ராணுவத்தில் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' அந்தஸ்தில் உள்ள தோனி, கடந்த சில நாட்களாக காஷ்மிரில் முகாமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று லடாக் மலைப் பகுதிக்கு சென்றார்.

அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த ராணுவ கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தில், ராணுவம் மற்றும் உள்ளூர் அணிகள் மோதிய போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.

தோனியை நேரில் காண, நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள், மைதானத்துக்கு வெளியில் காத்திருந்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பின் தோனி கூறுகையில்,""கிரிக்கெட்டில் வருவதற்கு முன், ராணுவத்தில் சேர வேண்டும் என்று திட்டமிட்டேன். கடைசியில் ரயில்வேயில் சேர்ந்தேன். இப்போது ராணுவத்தின் ஒரு உறுப்பினராக இருப்பது அதிர்ஷ்டம் தான்.

ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த இங்கு வரவில்லை. கடினமான சூழ்நிலையில் வீரர்கள் பணிபுரிவதைப் பார்க்கும் போது, அவர்களிடம் இருந்து எனக்குத் தான் ஊக்கம் கிடைத்துள்ளது.

இவ்வாறு தோனி கூறினார்.

0 comments:

Post a Comment