டெஸ்டில் மீண்டும் நம்பர்1 இடத்தை பிடிப்போம் - காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான காம்பீர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி மீண்டும் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. பாகிஸ்தானுடன் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆஸ்திரேலியா அல்லது வங்காளதேசத்துடன் எப்படி விளையாடுகிறோமோ அதுபோல தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியும் ஆகும்.

எந்த அணி என்பது முக்கியமல்ல. நாட்டுக்காக ஆடுகிறேன் என்பது முக்கியமானது. இந்திய அணியில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் சமமானவர்கள். நாட்டுக்காக விளையாடும் போது ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு.

கேப்டன் பதவியை ஏற்க நான் தயாராக இருப்பதாக கூறி இருந்தேன். கேப்டன் பதவி குறித்து தேர்வு குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டும். கேப்டன் பதவிக்கு என்னை தேர்வு செய்வேன் என்று டோனி கூறியது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 4 டெஸ்டிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்டிலும் விளையாடுகிறது. நீண்ட ஓய்வுக்கு பிறகு டெஸ்டில் ஆடுவதால் நம்பிக்கையுடன் உள்ளோம். இந்திய அணி திறமை வாய்ந்தது. இதனால் டெஸ்டில் மீண்டும் “நம்பர் 1” இடத்தை பிடிப்போம்.

இவ்வாறு காம்பீர் கூறினார்.

0 comments:

Post a Comment