ஒருசில பிரச்சினைகளுக்காக ஐபிஎல் மீது குற்றம் சொல்லக்கூடாது

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டித் தொடர் விறுவிறுப்பான ஆட்டங்கள் மட்டுமின்றி, சர்ச்சைகளுக்கும் இடம் பிடித்தன. ஷாரூக்கான் விவகாரம். ராகுல் ஷர்மா விவகாரம், லூக் போமர்ஸ்பேச் விவகாரம், ஸ்பாட் பிக்சிங் விவகாரம் என பரபரப்பான சர்ச்சைகள் இப்போட்டித் தொடரில் ஏற்பட்டன.

இதனையடுத்து ஐபிஎல் போட்டித் தொடரையே தடை செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான சச்சின் தெண்டுல்கரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்துள்ளதாவது;

ஒவ்வொரு நிர்வாகத்திலும் ஒருசில பிரச்னைகள் இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் குற்றம் சொல்ல முடியாது. அதுபோலத்தான் ஐபிஎல் நிர்வாகமும். என்னைப் பொறுத்தவரை, இந்த சூதாட்டம் நல்ல உதாரணம் இல்லை.

இன்றைய வீரர்கள் சரியான பாதையில் சென்றால், அவரைப் பின்பற்றும் ரசிகர்களும் நல்ல பாதையில் செல்வார்கள். சரியான பாதையில் செல்லும் கிரிக்கெட் வீரர்களை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment