பிரெஞ்ச் ஓபன்: வரலாறு படைத்தார் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தார் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால். நேற்று நடந்த பைனலில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பைனலில் உலகின் "நம்பர்-1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், "நம்பர்-2 இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடாலை சந்தித்தார்.

விறுவிறுப்பான இப்போட்டியில் நடால் 6-4, 6-3, 2-6, 1-2 என முன்னிலை வகித்திருந்த போது, மழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மீண்டும் ஆட்டம் நடந்தது. இதில் அபாரமாக ஆடிய நடால், 4வது செட்டை 7-5 என போராடி கைப்பற்றினார்.

இறுதியில் நடால் 6-4, 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, ஏழாவது முறையாக (2005-08, 2010-12) சாம்பியன் பட்டம் வென்றார்.

0 comments:

Post a Comment