ஹாட்ரிக் சாதனை படைத்த 4-வது இலங்கை வீரர்

பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 44 ரன்னில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் இலங்கை 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்தப்போட்டியில் இலங்கை வேகப்பந்து வீரர் பெரைரா ஹாட்ரிக் சாதனை படைத்தார். 41-வது ஓவரில் 2-வது பந்தில் யூனுஸ்கானையும், 3-வது பந்தில் அப்ரிடியையும், 4-வது பந்தில் சர்பிராஸ் அகமதுவையும் அவர் அவுட் செய்தார். 5-வது பந்தில் சோகைல் தன்வீர் ரன்அவுட் ஆனார்.

ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 32-வது ஹாட்ரிக் இதுவாகும். ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த 4-வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெரைரா பெற்றார்.

இதற்கு முன்பு இலங்கை வீரர்களில் மலிங்கா, சமிந்தா வாஸ், மெகரூப் ஹாட்ரிக் சாதனை படைத்து இருந்தனர்.

மலிங்கா 3 முறையும் (2007 தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2011 கென்யாவுக்கு எதிராக, 2011 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக).

சமிந்தாவாஸ் 2 முறையும் (2001 ஜிம்பாப்வேக்கு எதிராக, 2003 வங்காளதேசத்துக்கு எதிராக) ஹாட்ரிக் சாதனை படைத்தனர்.

மெகரூப் 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

0 comments:

Post a Comment