ஐ.பி.எல். வீரர்கள் மீதான ஸ்பாட் பிக்சிங் வழக்கு

5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியின்போது சுசிந்திரா (டெக்கான்), மோனிஷ் மிஸ்ரா (புனே), அமித்யாதவ், ஸ்ரீவத்சவா (பஞ்சாப்) மற்றும் டெல்லியைச் சேர்ந்த அபினவ் பாலி ஆகிய 5 வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தனியார் டெலிவிஷன் புலனாய்வு செய்து கண்டுபிடித்தது.

இதைத்தொடர்ந்து இந்த 5 பேரையும் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்டு செய்தது. ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் ரவிசவானி இதுதொடர்பாக விசாரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. அவரது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் வழக்கை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய 5 வீரர்கள் மீது இன்னும் ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. கிரிமினல் வழக்கை விசாரிக்கும் அதிகாரம் கிரிக்கெட் வாரியத்துக்கு இல்லை. இதனால் போலீசார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து எதிர்த்து வரும் கீர்த்தி ஆசாத் அந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி இருந்தார்.

0 comments:

Post a Comment