அணியில் சண்டை தொடர்கிறது? பயிற்சிக்கு வரவில்லை சேவாக்


டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெறும் லீக் போட்டியில் அயர்லாந்துடன் இந்தியா விளையாட உள்ளது.

அதற்காக டிரென்ட்பிரிட்ஜில் உள்ள லேடிபே மைதானத்தில் இந்திய அணியினர் திங்கள்கிழமை பயிற்சி மேற்கொண்டனர். அப்போது வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோரைக் காணவில்லை. இதையறிந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மைதானத்தில் வெகுநேரம் இருந்து கருத்து அறிய முயன்றனர். ஆனால் தோனி உள்பட யாரும் அவர்களிடம் பேச முன்வரவில்லை. இதனால் பத்திரிகையாளர்கள் அதிருப்தியுடன் திரும்பினர்.

பயிற்சி குறித்து பேச யாரும் முன்வரவில்லையே என அணி மேலாளர் அனிருத் செüத்ரியிடம் கேட்டதற்கு, அது அவர்களது விருப்பம். எதுவும் கட்டாயம் கிடையாது என்றார்.

இதையடுத்து, சேவாக்கிற்கும் தோனிக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளதாக ஊடகங்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த கருத்து உண்மைதான் என்பது போன்ற கருத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய அணிக்கு அளிக்கப்பட்ட தனியார் விருந்து ஒன்றில் சேவாக் தனது மனைவி ஆர்த்தி, மகனுடன் கலந்து கொண்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒட்டுமொத்த அணி வீரர்களும் ஆஜராகினர். நாங்கள் மிகவும் ஒற்றுமையுடன் உள்ளோம். எங்களுக்குள் சண்டை ஏதும் இல்லை என கேப்டன் மகேந்திர சிங் தோனி அப்போது கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் எனக்கும் சேவாக்கிற்கும் பிரச்னை என்பது போன்று பத்திரிகைகள் தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் பொய். பொறுப்பற்ற செயல் எனக் கூறியிருந்தார்.

1 comments: