அதிவேக சென்னைப் புயல்


ந்திய கார் பந்தய வீரரான கருண் சந்தோக், கிராண்ட் பிக்ஸ் 2 போட்டிகளில் கலக்கி வரும் இளம் புயல். சென்னையைச் சேர்ந்த இவரது இலக்கு, ஃபார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்று முத்திரைப் பதிக்க வேண்டும் என்பதே!

அண்மையில் ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் நடைபெற்ற ஜி.பி.2 பிரிவைச் சேர்ந்த 'சர்க்யூட் டி கட்டலுன்யா' கார்ப் பந்தய போட்டியில் சரியாக சோபிக்க முடியாததில் அவருக்கு வருத்தமே. ஆயினும், துவண்டு விடாமல் அடுத்தக் கட்ட முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறார்!

ஃபார்முலா 1 பந்தயத்துக்கான தகுதிப் போட்டியாகவே 'ஜி.பி. 2' அமைந்துள்ளதால், எல்லோரது பார்வையும் இப்போது கருண் சந்தோக் மீதே விழுந்துள்ளது.

தனது முயற்சிகள் குறித்து குறிப்பிடும் கருண், ''அடுத்த சீசனில் ஃபார்முலா ஒன் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்பதையே நான் இலக்காகக் கொண்டிருக்கிறேன். அதற்கான முயற்சிகளில் இந்த ஆண்டு முழுவதும் ஈடுபடுவேன்,'' என்கிறார் நம்பிக்கையுடன்.

'பிரிட்டிஷ் ரேசிங் டிரைவர்ஸ் கிளப்'பில் சேரும் அரிய கெளரவத்தைப் பெற்றுள்ள இந்த 25 வயது அதிவேக இளைஞன் இதுவரை புரிந்த சாதனைகள் இதோ உங்கள் பார்வைக்கு...

கருணின் சாதனைகளும் கடந்து வந்த பாதையும்!

2000: இந்திய நேஷனல் ரேசிங் சாம்பியன் பட்டம் 7 முறை வென்ற சாதனையாளர். போல் பொஷிசனில் 10 முறை அதிவேகமாக ஓட்டி தேசிய அளவில் சாதனைப்படைத்துள்ளார். இன்னும் அதை முறியடிக்க யாருமில்லை.

2001: இந்திய அணிக்காக மிக இளம் வயதில் பங்கேற்ற முதல் வீரரும் இவர்தான். ஒரே வருடத்தில் 8 முறை வென்றிருக்கிறார். ஆசிய அளவில் மிகவும் நம்பிக்கை தரும் ஒரே விரர் இவர் தான் என்று, பிரிட்டிஷ் ஃபார்முலா பந்தயத்திலும் பங்கேற்றார்.

2002: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் முதல் 6வதுக்குல் 3 முறை வென்றார். ஓவர் டிரைவ் பத்திரிக்கையின் சார்பில் மேன் ஆஃப் தி இயர் அவர் பெற்ற ஒரே இந்தியரும், தமிழரும் இவர் மட்டும்தான்.

2003: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் 8 முறை வெற்றி பெற்று 19 போடியம் முடித்தவர்ரும், டி-ஸ்போர்ட் முறையில் 24 முறையும், இந்தியா சார்பில் இங்கிலாந்தில் நடந்த சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் பங்கேற்றார்.

2004: பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயத்தில் முதல் நிலை ஆட்டக்காராக வந்தவர். இந்திய வீரர்களில் முதல் ஹீரோவான நரேன் கார்த்திகேயனுடன் இவரது ஜோடி நிசான் உலகக் தொடரில் இறுதி சுற்றில் பங்கேற்ற வீரர்களாக வளம் வந்தார்கள்.

2005: இந்தியா நடத்திய ஏ1 கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் ரினால்ட் உலகக் தொடர் ஆகிய போட்டிகள் பேங்கேற்ற முதல் வீரரானார்.

2006: ஆசிய ஃபார்முலா ரினால்ட் வீ6 சாம்பியன் போட்டியில் சரித்திர வெற்றி பெற்ற ஒரே இந்தியர், இந்த ஆண்டில் 12 போட்டிகளில் பங்கேற்று 9 போட்டிகளில் வெற்றி பெற்றார். என்.டி.டி.வி. ப்ராஃபிட் விருது பெற்ற ஒரே இந்தியரும் இவர்தான்.

2007: ரெட் புல் ரேஸிங்கில் முதல் வெற்றி வீரர். ஜிபி2 தொடரிலும், ஃபார்முலா சாம்பியன் சிஃப், மற்றும் இத்தாலியன் ஸ்குவாட் துராங்கோ தொடரிலும் பங்கேற்றார். பெல்ஜியத்தில் நடந்த தொடரில் அபார வெற்றி பெற்றவரும் ஆசிய அளவிலும் இவர் மட்டும்தான்.

2008: ஜிபி2 ஆசியா மற்றும் ஜிபி ஐரோப்பா ஆகிய தொடரில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். ஜெர்மனியில் அபாரமாக வெற்றி பெற்றார். சில்வர்ஸ்டோன், மொனாக்கோ மற்றும் துபாயில் நடந்த போட்டியில் போடியம் வரை முடித்தார். ஆஜ் தக், மற்றும் என்.டி.டி.வி. ஃபிராஃபிட் ஆகியவை சார்பில் சிறந்த கார் பந்தய வீரர் விருதை இரண்டாவது முறையாக தட்ட்சி சென்றவர் இவர்தான்.

2009: ஜிபி2 தொடர் மற்றும் ஓசியன் ரேசிங் டெக்னாலஜி ஆகிய தொடர்களில் பங்கேற்றுவருகிறார்.

வரும் செப்டம்பருக்குள் இவர் பங்கேற்கும் தொடர்கள்:

ஜூன்: இஸ்தான்புல் சில்வர்ஸ்டோன்.
ஜூலை : நர்பர்கிங், புடாபெஸ்ட்.
ஆகஸ்ட் : வெலன்சியா மற்றும் பெல்ஜியம்.
செப்டம்பர் : இத்தாலி மற்றும் போர்ட்சுகல் ஆகிய தொடர்களில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்.

முடிவின்றி செல்லும் இந்தச் சாதனைப் பட்டியலில் விரைவில் ஃபார்முலா 1-ல் இவர் புரியவுள்ள சாதனைகளும் இடம்பெறும் என்று நம்புவோம்!

0 comments:

Post a Comment