புதிய அவதாரம் எடுக்கிறார் கங்குலி


உலகக் கிண்ண "T20' போட்டியில் கங்குலி நேர்முக வர்ணனையாளராக கடமையாற்றவுள்ளார்.

இந்திய கிரிக்கெட அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2 ஆவது இனிங்ஸை விரைவில் தொடங்கவுள்ளார்.

இங்கிலாந்தில் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது ஈ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் வர்ணனையாளராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அரையிறுதி ஆட்டத்திலிருந்து அவர் இந்த பணியைத் தொடருவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய பணி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கங்குலியிடம் " கமெண்ட்ரி பொக்சில் ' உட்கார்ந்து கொண்டு உங்களது சக வீரர்களை விமர்சிப்பது உங்களுக்கு கஷ்டமாக இருக்காதா? என்று கேட்டபோது இப்போதுதான் கமெண்ட்ரி பணியைத் தொடங்குகிறேன்.அதுவும் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் மட்டுமே இப்பணியை செய்ய இருக்கிறேன். எனது முன்னாள் சக வீரர்களுடன் நான் நட்புடன் கைகுலுக்குவேன் என்று நம்புகிறேன். அவர்களிடம் பேட்டி எடுக்கவும் ஆர்வமாக உள்ளதாக நழுவலாகப் பதிலளித்தார்.


0 comments:

Post a Comment