தோல்விக்கு ஐ.பி.எல்., காரணம் தோனி-கிறிஸ்டன் மோதல்

"டுவென்டி-20' உலக கோப்பை தோல்வி தொடர்பாக இந்திய கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கிறிஸ்டன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியதற்கு ஐ.பி.எல்., தொடர் தான் காரணம் என்கிறார் கிறிஸ்டன்.
தோல்விக்கு ஐ.பி.எல்., மீது பழிபோட முடியாது என தோனி தெரிவித்துள்ளதால், இன்னொரு பிரச்னை வெடித்துள்ளது.இங்கிலாந்தில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது.
இதில் இந்திய அணி "சூப்பர்-8' சுற்றில் அடுத்தடுத்து பெற்ற தோல்வியால் அரையிறுதிக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. இது குறித்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் கூறியது:"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் ரசிகர்கள் பெருமைப்படும் வகையில் செயல்படாமல், வெளியேறியது கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
தோல்விக்கு எந்த காரணமும் கூற விரும்பவில்லை. ஆனால் வீரர்கள் சோர்வு காரணமாக முழு ஆற்றலுடன் செயல்பட வில்லை. நியூசிலாந்து தொடரில் வீரர்கள் உற்சாகமாக இருந்தனர். அது இங்கிலாந்தில் இல்லை. ஏனெனில் கடந்த ஜனவரியில் துவங்கிய எங்கள் பயணம், இன்னும் முடியவில்லை.
வீணான ஐ.பி.எல்.,: ஐ.பி.எல்., தொடரால் அதிக சோர்வடைவதாக வீரர்கள் நினைத்தனர். வீரர்களுக்கு காயமும் ஏற்பட்டது. இந்த தொடரில் பணம் தாராளமாக செலவிடப் பட்டது.
இந்த காலங்களில் வீரர்களின் நடத்தையையும் கண்காணிக்க முடியாமல் போனது. ஏனெனில் அவர்கள் அணி உரிமையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். அவர்களுக்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது.
தங்கள் உரிமையாளர்களை மகிழ்விப்பதிலே குறியாக இருந்தனர். ஐ.பி.எல்., ஒரு உள்ளூர் தொடர் தான். இதில் சில முக்கியமான மற்றும் சிறந்த வீரர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

விரைவில் சாதிக்கலாம்: வீரர்களுக்கு போதிய பயிற்சி கொடுப்பதா அல்லது ஓய்வு கொடுப்பதா என உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தால் முக்கிய தொடர்களில் சிறப்பாக செயல்படுவார்கள். அடுத்த 9 மாதங்களுக்குள் வெஸ்ட்இண்டீசில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் துவங்கவுள்ளது.
இதற்காக நமக்கு நல்ல திட்டங்கள் தேவைப்படுகிறது. இந்திய வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் விளையாடாமல் இருந்தால், எல்லோரும் எதிர்பார்க்கும் வகையில் அசத்தலாம். இதற்கு வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். உண்மை தெரிந்தது: வங்க தேசம், அயர்லாந்து போன்ற சிறிய அணிகளை எளிதாக வென்றோம். ஆனால் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டி சவாலாக இருந்தது. இது சர்வதேச தரம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக எப்படி கடினமாக போராட வேண்டும் என்ற உண்மையை உணர்த்தியது. திறமையாக செயல்படும் கேப்டன்களில் தோனியும் ஒருவர். எதையும் விரைவாக கற்றுவிடுவார். 50 ஓவர் கிரிக்கெட்டில் போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுப்பதில் வல்லவர்.
"டுவென்டி-20' கிரிக்கெட்டிலும் சாதிக்க முற்படுகிறார். பேட்டிங் கில் முன்னேறி வரும் தோனி, இந்த வகை போட்டியில் சிறப் பான இன்னிங்சிற்காக காத்திருக் கிறார். இவ்வாறு கிறிஸ்டன் தெரிவித் தார்.கிறிஸ்டனின் இந்த பேட்டி, தோனியின் கருத்துக்கு எதிராக உள்ளது. ""தோல்விக்கு ஐ.பி. எல்., தொடர் மீது பழிபோட முடியாது. நான் மற்றும் சக வீரர்கள் நூறு சதவீத திறமையை போட்டிகளில் வெளிப்படுத்தவில்லை என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க இயலாது,'' என தோனி தெரிவித்திருந்தார். கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு இந்திய கிரிக் கெட்டில் புயலை கிளப்பியுள்ளது.
பி.சி.சி.ஐ., ஆவேசம்:கிறிஸ்டன் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ., நிதி குழு தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" ஐ.பி.எல்., மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. சோர்வாக இருப்பதாக வீரர்கள் உணர்ந்தால் உடனடியாக விலகிக் கொள்ளலாம். அவர்களுக்கு பதிலாக, மாற்று வீரரை பி.சி.சி.ஐ., தயாராக வைத்துள்ளது. ஒரு தொடரில் பங்கேற்கும்படி எந்த ஒரு வீரரையும் நிர்ப்பந்திப்பது கிடையாது ,'' என்றார்.
முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு:பயிற்சியாளர் கிறிஸ்டன் கருத்துக்கு முன்னாள் இந்திய வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சந்தீப் படேல்: தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து வீரர்களும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடினர். இந்த அனுபவத்தை அவர்கள் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பயன்படுத்தினர். இதுபற்றி கிறிஸ்டன் பதிலளிக்க வேண்டும். டிராவிட் தலைமையில் 2007 உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் இருந்து வெளியேறினோம். இதற்கு பின் கேப்டன் பணியில் தோனி சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறார். இது தான் முதல் தோல்வி. இதை ஏற்றுக்கொண்டு, அடுத்த தொடரில் கவனம் செலுத்த வேண்டும். லால்சந்த் ராஜ்புட்: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற கிப்ஸ், பிராவோ, வான் டர் மெர்வி சிறப்பாக சாதிக்கிறார்களே. நமது அணியினர் நன்கு செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் நமது அணி, சிறந்த அணிதான் என நினைக்கிறேன்.. சந்து போர்டே: ஐ.பி.எல்., "டுவென்டி-20' உலக கோப்பை தொடர், இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என தெரியவில்லை. ஐ.பி.எல்., போட்டிகள், உலக கோப்பை தொடருக்கான பயிற்சி களம். நம்முடைய வீரர்கள் இதை பயன்படுத்தி இருக்கலாம். பேட்டிங் ஆர்டரை மாற்றியதே தோல்விக்கு காரணம்.
கங்குலி போல் செயல்படும் தோனி:"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி குறித்த செய்திக்கு தினமலர் இணையதள வாசகர்கள் கருத்து:இதுவரை இந்திய அணி பெற்ற வெற்றிக்கு, அணியின் ஒட்டு மொத்த செயல்பாடுதான் காரணம். முக்கியமான போட்டியில் வெற்றி தேடித்தர தோனி தவறிவிட்டார். அவரை கேப்டன் பதவியில் இருந்து விலக்க இதுதான் தருணம். இல்லை என்றால் இனி தோல்வி தொடரும்.- ஹுசைன்.
தோனி, "ஸ்டம்புகளுக்கு' பின், பந்துகளை தவறவிடுவது, "ஸ்டம்பிங்' வாய்ப்பை கோட்டை விடுவது, உதிரி ரன்களை விட்டுக்கொடுப்பது என நிறைய தவறுகள் செய்கிறார்.-பாட்ஷா, அரபு எமிரேட்ஸ்
தோனி மீது ஒரு தவறும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம். சேவக் இல்லாமல் "டுவென்டி-20' கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு வெற்றி கடினம் தான்.-நடராஜன், கத்தார்
அணி தேர்வு விஷயங்களில் கங்குலி போல அதிகம் தலையிடுகிறார். பேட்டிங்கில் மிரட்டும் பழைய தோனியை, இப்போது காண முடிய வில்லை. சாமர்த்தியமாக பேசி, அணியின் மீது குற்றம் சுமத்தி தப்பித்து விடுகிறார்.

1 comments:

  1. உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


    உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

    இதில் குறிப்பாக
    1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
    2-ஓட்டளிப்புப் பட்டை
    3-இவ்வார கிரீடம்
    4-சிறப்புப் பரிசு
    5-புத்தம்புதிய அழகிய templates
    6-கண்ணை கவரும் gadgets
    ஒரு முறை வந்து பாருங்கள்
    முகவரி http://tamil10.com/tools.html

    ReplyDelete