தோனி,செவாக்கிடையே பனிப்போர் இந்திய அணியில் கருத்து வேறுபாடு



இரண்டாவது 20 ஓவர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், இந்திய அணியில் கருத்து வேறுபாடிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணிக் கப்டன் தோனிக்கும் துணைக்கப்டன் செவாக்குக்குமிடையே பனிப்போர் நடந்து வருவதாகவும் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தோள் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக செவாக் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. அவரது காயம் குறித்து கப்டன் தோனியிடம் நிருபர்கள் கேட்டபோது,

நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. நீங்கள் அணியின் உடலியக்க நிபுணரைக் கேளுங்கள் என்று தெரிவித்தார். இதன் மூலம் செவாக்குடன் அவருக்கிருக்கும் மோதல் வெளியே தெரியவந்தது.

அணியிலுள்ள ஒரு வீரரின் காயம் சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு தோனிக்குள்ளது. ஆனால், அவர் அதைத் தட்டிக்கழித்தார். அணி வீரர்கள் கூட்டத்தின் போது இருவரும் பேசாமலிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

செவாக் உடல் தகுதி இல்லாததை காரணமாக வைத்து அவரை அணியிலிருந்து கழற்ற தோனி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. ரோகித்சர்மா நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 36 ஓட்டமும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி 80 ஓட்டமும் எடுத்தார்.

இது குறித்து தோனி கூறும் போது, ஐ.பி.எல். போட்டியிலிருந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் ஒருவர் மட்டுமே தற்போது மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். அவரைத் தொடக்க வீரராக களமிறக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்றார். இதன் காரணமாக சேவாக்குக்குப் பதிலாக ரோகித்சர்மா தொடக்க வீரராக களமிறக்கப்படலாமென்று தெரிகிறது.

செவாக் உண்மையிலேயே உடல் தகுதியில்லாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டால் சரிதான்.கருத்து வேறுபாடு காரணமாக அவரை கழற்றி விட்டால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், செவாக் மாதிரியாக அதிரடியாக விளையாடக்கூடியவர்கள் மிகக்குறைவு.

சிறந்த அதிரடி வீரரான அவர் நியூஸிலாந்து தொடரில் ஆடிய விதத்தை ரசிகர்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். ரோகித்சர்மா சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை வைத்துக்கொண்டு அவரை செவாக்குடன் ஒப்பிடுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. செவாக்கின் அதிரடி ஆட்டத்தை பொறுத்துத்தான் இந்தியாவுக்கு மீண்டும் உலகக்கிண்ணம் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை கப்டனுக்கும் துணைக் கப்டனுக்கும் எப்போதும் ஒத்துப்போனது கிடையாது.இதற்கு முன்பு கபில்தேவ்கவாஸ்கர்,அசாருதீன்டெண்டுல்கர்,அல்லது கங்குலிடிராவிட் அல்லது டிராவிட்டெண்டுல்கர் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. please help me ur blog is on tamil but how google adds are appearing here?..

    ReplyDelete
  2. ithu poiyana thagaval. ithai coach kirsten avarkal megavum vanmaiyai kandithu irukirar.

    ReplyDelete