தோனிக்கு எதிராக ரசிகர்கள்


: "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் தவறான யுக்திகளை கையாண்ட கேப்டன் தோனிக்கு எதிராக இந்திய ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.

இங்கிலாந்தில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் படுமோசமாக ஆடிய நடப்பு சாம்பியன் இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. நேற்று முன் தினம் நடந்த தென் ஆப்ரிக் காவுக்கு எதிரான கடைசி "சூப்பர்-8' போட்டியிலும் தோல்வி அடைந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவின் போது தோனிக்கு எதிராக இந்திய ரசிகர் கள் கோஷம் எழுப்பி, தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து தோனி கூறியது:ரசிகர்கள் கோஷம் எழுப்புவது முதல் முறையல்ல. 2007ல் நடந்த உலக கோப்பை (50 ஓவர்)தொடரில் தோல்வி அடைந்த போது எனக்கு இறுதிச் சடங்கு நடத்தி வெறுப்பை காட்டினர். இதற்காக நான் கவலைப்படவில்லை. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என்பதையே சுட்டிக் காட்டுகிறது. "டுவென்டி-20' உலக கோப்பை தோல்விக்கு வீரர்கள் சோர்வாக இருந்ததே காரணம் என கூறுவதை ஏற்க இயலாது. சிலர் மட்டுமே நூறு சதவீத உடல்தகுதி இல்லாமல் இருந்தனர். முன்பு ஒட்டுமொத்த அணியாக 80 சதவீதம் வரை சிறப்பாக செயல்பட்டோம். இம்முறை அணியாக 60 சதவீதம் கூட நன்றாக செயல்படவில்லை. பேட்டிங்கில் கோட்டை விட்டது தான் வீழ்ச்சிக்கு வித்திட்டது.இவ்வாறு தோனி கூறினார்.

0 comments:

Post a Comment