"எந்த அணியையும் தோற்கடிக்கக் கூடிய ஒருங்கிணைப்பு இந்திய வீரர்களிடம் உண்டு'

எந்த அணியையும் தோற்கடிக்கக் கூடிய ஒருங்கிணைப்பு இந்திய அணியில் உள்ளது. ஆதலால் இங்கிலாந்தில் மீண்டும் ருவென்ரி 20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

தனது குடும்பத்தினருடன் மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணிகளிடையிலான ஆட்டத்தை லோர்ட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை கண்டுகளித்தார் அவர். அந்தப் போட்டியில் தோல்வியுற்று அடுத்த சுற்று முன்னேற்றத்துக்கு இந்திய அணி திணறிவரும் நிலையில் நம்பிக்கை தரும்படியான கருத்தை சச்சின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியுள்ளதாவது;

இந்திய அணி அபாரமான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளதால் அபாரமான முடிவுகளைக் கண்டு வருகிறது. துடுப்பாட்டம், பந்து வீச்சில் சமமான பலத்தை கொண்டுள்ளது. உலகக் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு தேவையான அம்சங்கள் (வீரர்கள்) அனைத்தும் இந்தியக் குழுவில் உள்ளது. ஆதலால் மீண்டும் இந்தியா வெல்லும்.

சமீப ஆண்டுகளாக வெளிநாட்டில் பெற்று வரும் சிறப்புகள் எந்த அணிக்கு எதிராகவும் பயமில்லாமல் விளையாட இந்திய அணிக்கு உறுதுணையாகியுள்ளது என்றார்.


0 comments:

Post a Comment