சேவாக் இல்லாததே தோல்விக்கு காரணம்: கங்குலி

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வெல்லப்போது யார் என்ற விவாதம் ரசிகர்களிடம் தீவிரமாகியுள்ள நிலையில், நடப்பு சாம்பியன் இந்தியா அரையிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் அப் போட்டியிலிருந்து வெளியேறியது ஏன் என்ற விவாதமும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட களைப்பே தோல்விக்குக் காரணம் என இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் காரணம் அதுவல்ல; வீரேந்திர சேவாக் விளையாடாமல் போனதே காரணம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளது:

இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் பெற்றுள்ள தோல்விக்கு கேரி கிர்ஸ்டன் கூறும் காரணத்தை நான் ஏற்பதாக இல்லை. அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களில் பெரும்பாலானோர் 22- 23 வயது இளைஞர்கள். இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு களைப்பு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவேளை தோனி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகியோர் அவர் கூறும் காரணத்துக்கு வாய்ப்பாக இருந்திருக்கலாம் என்றாலும், அவர்கள் அனைவரும் நிரந்தரமாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடி வருபவர்கள். சாலை வழியாகப் பயணித்து கூட நிறைய போட்டிகளில் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கும் களைப்பு பிரச்னையாக இருந்திருக்குமா எனத் தெரியவில்லை.

என்னைப் பொருத்தவரை தில்லியைச் சேர்ந்த வீரேந்திர சேவாக் விளையாடமுடியாமல் போனதே அணிக்கு துரதிருஷ்டம். அவரது ஆட்டம், நிச்சயம் அணியில் மாறுதலை ஏற்படுத்தியிருக்கும்.

அவருக்குப் பதிலாக இன்னிங்ûஸத் தொடங்கிய ரோஹித் சர்மா, முதன் முதலாக அந்த வாய்ப்பை பெற்றவர். கடைசியாக அவர் விளையாடிய 3 ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடவில்லை. பின்னர் எப்படி முக்கியமான உலகக் கோப்பை போட்டியில் சிறப்பை எதிர்பார்க்கலாம்?

சேவாக், சச்சின், கம்பீர் ஆகியோர் ஒருதின போட்டிகளில் முக்கியமான வீரர்கள். அவர்களில் சேவாக்கும், சச்சினும் இல்லாதபோது எப்படி வலுவான அணியாகப் பார்க்க முடியும்? என்றாலும் உண்மையிலேயே போட்டி என்றால் அது டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகள்தான். டுவென்டி-20 போட்டி அல்ல. அவற்றில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது என்றார் கங்குலி.

0 comments:

Post a Comment