ஹர்பஜன், காம்பிருக்கு சோதனை



நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன், ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிகள் மோதும் இரானி கோப்பை போட்டி, இன்று பெங்களூருவில் துவங்குகிறது.   

ரஞ்சி கோப்பை தொடர் துவங்கி (1934) 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் கடந்த 1959–60 முதல் இரானி கோப்பை போட்டி (5 நாட்கள்) நடக்கிறது. இதில், ரஞ்சி கோப்பை தொடரின் ‘நடப்பு சாம்பியன்’ மற்றும் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிகள் மோதும்.

இதையடுத்து, இந்த ஆண்டு பட்டம் வென்ற கர்நாடக அணி, ஹர்பஜன் சிங் தலைமையிலான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியை எதிர்த்து இன்று பெங்களூருவில் களமிறங்குகிறது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட் வீழ்த்த தடுமாறுகிறார். இந்நிலையில், ஹர்பஜன் சிங் சாதிக்கும் பட்சத்தில் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்கும்.

இதேபோல ஷிகர் தவான், முரளி விஜய் இருவரும் இந்திய அணிக்கு சரியான துவக்கம் தர தவறுகின்றனர். இதனால், ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிக்கு காம்பிர் சிறந்த ரன்குவிப்பை கொடுத்தால், இந்திய அணியில் தேர்வு செய்யப்படலாம். 

தவிர, மகாராஷ்டிரா அணிக்காக ரஞ்சி தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேதர் ஜாதவ் (1,223 ரன்கள்), பங்கஜ் சிங், அசோக் டிண்டா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோனும் உதவுவர் எனத் தெரிகிறது. 


சொந்தமண் பலம்:

கர்நாடக அணி சொந்தமண்ணில் களமிறங்குவது பலம். தவிர, ஸ்டூவர்ட் பின்னி, மனிஷ் பாண்டே, உத்தப்பா, லோகேஷ் ராகுல், காருண் நாயர் பேட்டிங்கில் கைகொடுக்க காத்திருக்கின்றனர். பவுலிங்கில் கேப்டன் வினய் குமார், அபிமன்யு மிதுன், ஸ்ரீநாத் அரவிந்த் உதவலாம்.

0 comments:

Post a Comment