20 ஓவர் போட்டியால் கிரிக்கெட்டுக்கு அழிவு

டெஸ்ட் (5 நாள்), ஒருநாள் போட்டி (50 ஓவர்) மற்றும் 20 ஓவர் போட்டி ஆகிய 3 நிலைகளில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது.

இதில் 3 மணி நேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். 

பேட்ஸ் மேன்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் 20 ஓவர் போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு காணப்படுகிறது.

இந்த நிலையில் 20 ஓவர் போட்டியால் கிரிக்கெட்டுக்கு அழிவு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

20 ஓவர் போட்டியில் பந்துகள் சிக்சர், பவுண்டரிகளாய் பறக்கிறது. இந்தப் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பேட்டிங்கும், பந்துவீச்சும் சமநிலையில் இருக்க வேண்டும்.

பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் மட்டுமே 20 ஓவர் போட்டி உள்ளது. பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. 

இரண்டையும் சமமாக பார்க்க வேண்டும். இதே நிலை நீடித்தால் கிரிக்கெட் விளையாட்டுக்கு அழிவு காலம் தான். 

போட்டி மற்றும் பொழுது போக்குக்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment