ஏன் தோனி இப்படி?



பயிற்சியாளரும் சரியில்லை. கேப்டன் தோனியும் சரியில்லை’’ என, முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.

2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றது. இதன் பின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ்டன் பதவி விலகினார். இதையடுத்து ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர், புதிய பயிற்சியாளர் ஆனார்.

அன்று முதல் இந்திய அணியை தோல்வியும் தொற்றிக் கொண்டது. உள்ளூர் போட்டிகளில் அசத்தும் இந்திய அணி வீரர்கள், அன்னிய மண்ணில் சொதப்புகின்றனர். 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் கோப்பை வென்று விட்டனர்.

இதற்கு தோனியை குற்றம் சுமத்தும் அதேநேரம், பயிற்சியாளர் பிளட்சருக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து பிஷன் சிங் பேடி கூறியது:

இந்திய அணி கேப்டன் தோனி, களத்தில் வெற்றி பெறத் தேவையான திட்டங்களை வகுப்பதில்லை. பவுலர்களுக்கு நல்ல கேப்டனாக இருந்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டியை பார்த்தேன்.

அப்போது, தனது சுழற்பந்துவீச்சாளரரிடம் (அமித் மிஸ்ரா அல்லது பியுஸ் சாவ்லா) ‘விக்கெட் வீழ்த்தி விடாதே, விக்கெட் வீழ்த்தி விடாதே,’ என கூறியதை அங்கிருந்த, ‘ஸ்டம்ப் மைக்ரோபோன்’ வழியாக கேட்டேன். 

இதையடுத்து, ‘நல்ல வேளை இம்மாதிரியான கேப்டனுக்கு கீழ் விளையாடவில்லை,’ எனக்கு நானே கூறிக்கொண்டேன். தோனி தற்போது நெருக்கடியில் உள்ளார். இந்நேரத்தில் இவரை விமர்ச்சிக்க விரும்பவில்லை.

0 comments:

Post a Comment