குளிர்கால ஒலிம்பிக் கோலாகல துவக்கம்



குளிர்கால ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று கோலாகலமாக துவங்கியது.

ரஷ்யாவின் சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று துவங்கியது. இதில், 88 நாடுகளை சேர்ந்த 2800க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

இதன் துவக்க விழா வண்ணமயமாக நடந்தது. ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று ரஷ்யாவின் பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 

ஆடல், பாடல், ‘லேசர் ஷோ’, வாணவேடிக்கை என நிகழ்ச்சிகள் களை கட்டின. 


இந்தியா பரிதாபம்:

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறைப்படி தேர்தலை நடத்தாத, இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) தடை செய்யப்பட்டது. 

இதனால், நேற்றைய அணிவகுப்பின் போது ஷிவ் கேசவன், ஹமிான்சு தாகூர் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடி ஏந்தி வராதது பெரும் அவமானமாக அமைந்தது. 

இவர்கள் ‘சுதந்திரமான வீரர்கள்’ என்ற அடிப்படையில் ஒலிம்பிக் கொடியுடன் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

0 comments:

Post a Comment