இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் ஆகஸ்ட் 6 முதல் 14-ம்தேதி வரை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் இந்தியக் குழுவில் தமிழகத்திலிருந்து ஜெ. அக்னீஸ்வர், ஜெயவந்த் விஜயகுமார் (இருவரும் சென்னை), சந்தீப் (நெய்வேலி) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 8 நாள் நடைபெறும் போட்டியில் சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்த்த 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்திய அணி: சிறுவர்: ஜெ. அக்னீஸ்வர், ஜெயவந்த் விஜயகுமார், சந்தீப் ஜேஜ்வால், வீர்தவால் காடே, ரோஹன் போஞ்சா, ஷிப்நாத் நாஸ்கர், பல்கீத் குமார், சந்தீப், பிரஜ்வால், ஆரோன் டிசோசா,...

விம்பிள்டன் டென்னிஸ்: தினாரா- வீனஸ் அரையிறுதி மோதல்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வீனஸ் வில்லியம்ûஸ எதிர்த்து ரஷியாவின் தினாரா சபினா மோத உள்ளார். மற்றொரு ரஷிய வீராங்கனை எலீனா டேமன்டீவாவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். விம்பிள்டனில் செவ்வாய்க்கிழமை நடந்த காலிறுதி ஆட்டத்தில், தகுதிநிலையில்கூட இடம்பெறாத ஜெர்மனி வீராங்கனை சபைன் லிசிக்கியை 6-7, 6-4, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார் சபினா. போட்டித் தரநிலையில் முதலிடத்தில் உள்ள சபினா முதல் செட்டை இழந்து வென்றது குறிப்பிடத்தக்கது. வீனஸ் வெற்றி: முன்னதாக அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-1, 6-2 என்ற நேர் செட்களில்...

இந்தியா முன்னேற்றம்

கசானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி-2 போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் சாம்பியன்ஸ் சாலஞ்ச்-1 போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளது இந்திய மகளிர் குழு.கசானில் கடந்த சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை 6-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைப் பெற்றது இந்திய அணி.ராணி ராம்பால் அதிரடியாக 4 கோல்களும், சபா அஞ்சும், சான்சான் தேவி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினர்.இந்தியக் குழுவுக்கு இவ்வெற்றி, சிறப்பான முன்னேற்றம் அளித்துள்ளது.சாம்பியன்ஸ் சாலஞ்ச்-1 போட்டியிலும் பட்டம்...

ரூ. 175 கோடியில் சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிப்பு

பழமைவாய்ந்த சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் முழுவதுமாக இடிக்கப்பட்டு, ரூ. 175 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 79-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த மாபெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. "ஸ்டேடியத்தை புதுப்பிக்க பொதுக்குழு முழுவதுமாக ஆதரவு அளித்துள்ளது. என்றாலும் அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை...

யுவராஜ் சதம்; இந்தியா "த்ரில்" வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருதின கிரிக்கெட் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியில் யுவராஜ் சிங் அபாரமாகச் சதம் அடித்தார். மேற்கிந்தியத் தீவுகளுடன் 4 போட்டிகளைக் கொண்ட ஒருதின கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 50 ஓவர்களாக நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கும், காம்பீரும் முதலில் களம் இறங்கினர். காம்பீர் அதிரடியாகத் தொடங்கி 13 ரன்கள் எடுத்திருந்தபோது டெய்லர் பந்துவீச்சில் அவுட்டாகி...

பகலிரவாக டெஸ்ட் ஆட்டங்கள்

டெஸ்ட் ஆட்டங்களை பகலிரவாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் லார்ட்ஸில் புதன்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்குப் பின் ஐசிசி தலைவர் டேவிட் மோர்கன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: டெஸ்ட் ஆட்டங்களில் நடுவரின் முடிவு குறித்து பேட்ஸ்மேன்கள் முறையிடும் முறை கடந்த பல மாதங்களாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அத்தகைய முறையை அக்டோபருக்குப் பின் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.பகலிரவு ஆட்டங்களில் எந்த வகையான பந்தை உபயோகப்படுத்துவது...

ஷரபோவா, ஷுட்லருக்கு அதிர்ச்சி: சானியா மிர்சா தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் ஜெர்மனி வீரர் ரெய்னர் ஷுட்லர், ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினர். புதன்கிழமை நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் இடம் பெறாத இஸ்ரேல் வீரர் டுடி செலா 7-6 (7-3), 6-3, 6-2 என்ற நேர் செட்டுகளில் ஷுட்லரை வெளியேற்றினார். தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ளவர் ஷுட்லர் என்பது குறிப்பிடத்தக்கது. தரவரிசையில் 28-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா 6-4, 6-4 என இந்தியாவின் சானியா மிர்சாவை வீழ்த்தினார். தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள ஷரபோவா 2-6, 6-3, 4-6...

வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை

இந்திய கேப்டன் தோனி சாட்டையை சுழற்றியுள்ளார். அணியின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள இவர், காயம் அடைந்த வீரர்களுக்கு அணியில் இடமில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி "சூப்பர்-8' சுற்றோடு வெளியேறியது. இதற்கு பெரும்பாலான வீரர்கள் முழு உடல்தகுதியில்லாமல் பங்கேற்றதே முக்கிய காரணம் என கூறப்பட்டது. உதாரணமாக வலது தோள்பட்டையில் லேசான வலி என்று சேவக் முதலில் கூறியுள்ளார். பின்னர் லண்டனில் சோதனை செய்த போது "ஆப்பரேஷன்' செய்யும் அளவுக்கு பெரிய பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது....

சானியா வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக் தகுதி பெற்றார் இந்தியாவின் சானியா மிர்சா. கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜெர்மனியின் அனா-லினா குரோயன்பீல்டை எதிர் கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில் சானியா மிர்சா 6-2, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினா...

சேவாக் இல்லாததே தோல்விக்கு காரணம்: கங்குலி

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வெல்லப்போது யார் என்ற விவாதம் ரசிகர்களிடம் தீவிரமாகியுள்ள நிலையில், நடப்பு சாம்பியன் இந்தியா அரையிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் அப் போட்டியிலிருந்து வெளியேறியது ஏன் என்ற விவாதமும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது.தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட களைப்பே தோல்விக்குக் காரணம் என இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கருத்து தெரிவித்துள்ளார்.ஆனால் காரணம் அதுவல்ல; வீரேந்திர சேவாக் விளையாடாமல் போனதே காரணம் என...

தோனிக்கு எதிராக ரசிகர்கள்

: "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் தவறான யுக்திகளை கையாண்ட கேப்டன் தோனிக்கு எதிராக இந்திய ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.இங்கிலாந்தில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் படுமோசமாக ஆடிய நடப்பு சாம்பியன் இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. நேற்று முன் தினம் நடந்த தென் ஆப்ரிக் காவுக்கு எதிரான கடைசி "சூப்பர்-8' போட்டியிலும் தோல்வி அடைந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவின் போது தோனிக்கு எதிராக இந்திய ரசிகர் கள் கோஷம் எழுப்பி, தங்கள் ஆத்திரத்தை...

சச்சின், ரெய்னா, ஜாகிர் ஓய்வு..இந்திய அணியில் மீண்டும் நெஹ்ரா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின் "வேகப்புயல்' ஆசிஷ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றுள்ளார். காயம் காரணமாக சச்சின், சேவக், சுரேஷ் ரெய்னா, ஜாகிர் கான் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பத்ரிநாத் இடம் பெற்றுள்ளனர்.வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகள் ஜமைக்காவில் வரும் 26, 28ம் தேதி நடக்கிறது. மூன்றாவது, நான்காவது போட்டி முறையே ஜூலை 3, 5ம் தேதியில்...

தோல்விக்கு ஐ.பி.எல்., காரணம் தோனி-கிறிஸ்டன் மோதல்

"டுவென்டி-20' உலக கோப்பை தோல்வி தொடர்பாக இந்திய கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கிறிஸ்டன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியதற்கு ஐ.பி.எல்., தொடர் தான் காரணம் என்கிறார் கிறிஸ்டன். தோல்விக்கு ஐ.பி.எல்., மீது பழிபோட முடியாது என தோனி தெரிவித்துள்ளதால், இன்னொரு பிரச்னை வெடித்துள்ளது.இங்கிலாந்தில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் இந்திய அணி "சூப்பர்-8' சுற்றில் அடுத்தடுத்து பெற்ற தோல்வியால் அரையிறுதிக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. இது குறித்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் கூறியது:"டுவென்டி-20'...

20 இடங்கள் முன்னேறினார் சானியா

பர்மிங்காமில் நடைபெற்ற ஏகான் கிளாஸிக் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் விளையாடியதால், உலக டென்னிஸ் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார் இந்தியாவின் சானியா மிர்சா. அப் போட்டிக்கு முன்னர் 98-வது இடத்தில் இருந்த அவர், தற்போது 78-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டையர் பிரிவில் 2 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தைப் பிடித்துள்ள...

"எந்த அணியையும் தோற்கடிக்கக் கூடிய ஒருங்கிணைப்பு இந்திய வீரர்களிடம் உண்டு'

எந்த அணியையும் தோற்கடிக்கக் கூடிய ஒருங்கிணைப்பு இந்திய அணியில் உள்ளது. ஆதலால் இங்கிலாந்தில் மீண்டும் ருவென்ரி 20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.தனது குடும்பத்தினருடன் மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணிகளிடையிலான ஆட்டத்தை லோர்ட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை கண்டுகளித்தார் அவர். அந்தப் போட்டியில் தோல்வியுற்று அடுத்த சுற்று முன்னேற்றத்துக்கு இந்திய அணி திணறிவரும் நிலையில் நம்பிக்கை தரும்படியான கருத்தை சச்சின் தெரிவித்துள்ளார்.இது பற்றி அவர் கூறியுள்ளதாவது;இந்திய அணி அபாரமான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளதால்...

சூப்பர்-8 அட்டவணை

உலக கோப்பை லீக் சுற்றுப் போட்டிகளில் இருந்து வங்கதேசம்,ஆஸ்திரேலியா,ஸ்காட்லாந்து,நெதெர்லாந்து,ஆகிய அணிகள் வெளியேறின.தற்போது இருக்கும் 8 அணிகள் 'இ' மற்றும் 'எப்' பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.இதன்படி குரூப் 'இ' பிரிவில் இந்தியா (ஏ1),இங்கிலாந்து (பி2),வெஸ்ட் இண்டீஸ் (சி1),தென் ஆப்பிரிக்கா(டி2)அணிகள் இடம் பெற்றுள்ளன.குரூப் 'எப்'பிரிவில் அயர்லாந்து(ஏ2),பாகிஸ்தான்(பி1),இலங்கை(சி2),நியூசிலாந்து(டி1)அணிகள் இடம் பிடித்துள்ளன.இதன் படி 'டுவென்டி -20 ' உலக கோப்பை 'சூப்பர் 'சுற்று போட்டிகளின் அட்டவணை விபரம்:நாள் குரூப் அணிகள் ...

"டுவென்டி-20' உலக கோப்பை திருவிழா

ஒரே ஓவரில் யுவராஜ் 6 சிக்சர்கள் விளாசியது, ஜிம்பாப் வேயிடம் ஆஸ்திரேலியா வீழ்ந்தது, 57 பந்தில் கிறிஸ் கெய்ல் 117 ரன்கள் விளாசியது, பைனலில் கடைசி ஓவரில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி, கோப்பை வென்றது போன்ற "திரில்' விஷயங்கள் முதலாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் அரங்கேறின. இதே போன்றதொரு பரபரப்பான தருணங்களை அடுத்த மாதம் நடக்க உள்ள 2வது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரிலும் ரசிகர்கள் அனுபவிக்க காத்திருக்கின்றனர். கடந்த முறை கோப்பை வென்ற உற்சாகத்தில்...

'சூப்பர் 8' மோதல் இன்று தொடக்கம்

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது முதல் சுற்றிலிருந்து 8 அணிகள் சூப்பர்-8 லீக் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகள் பிரிவு இ, பிரிவு எஃப் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் லீக் முறையில் விளையாடுகின்றன. அப் போட்டிகள் வியாழக்கிழமை (ஜூன் 11) முதல் ஜூன் 16-ம்தேதி வரை நடைபெறுகின்றன. இவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறு...

அணியில் சண்டை தொடர்கிறது? பயிற்சிக்கு வரவில்லை சேவாக்

டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெறும் லீக் போட்டியில் அயர்லாந்துடன் இந்தியா விளையாட உள்ளது. அதற்காக டிரென்ட்பிரிட்ஜில் உள்ள லேடிபே மைதானத்தில் இந்திய அணியினர் திங்கள்கிழமை பயிற்சி மேற்கொண்டனர். அப்போது வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோரைக் காணவில்லை. இதையறிந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மைதானத்தில் வெகுநேரம் இருந்து கருத்து அறிய முயன்றனர். ஆனால் தோனி உள்பட யாரும் அவர்களிடம் பேச முன்வரவில்லை....

அதிவேக சென்னைப் புயல்

இந்திய கார் பந்தய வீரரான கருண் சந்தோக், கிராண்ட் பிக்ஸ் 2 போட்டிகளில் கலக்கி வரும் இளம் புயல். சென்னையைச் சேர்ந்த இவரது இலக்கு, ஃபார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்று முத்திரைப் பதிக்க வேண்டும் என்பதே!அண்மையில் ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் நடைபெற்ற ஜி.பி.2 பிரிவைச் சேர்ந்த 'சர்க்யூட் டி கட்டலுன்யா' கார்ப் பந்தய போட்டியில் சரியாக சோபிக்க முடியாததில் அவருக்கு வருத்தமே. ஆயினும், துவண்டு விடாமல் அடுத்தக் கட்ட முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறார்!ஃபார்முலா...

உலகக் கோப்பையில் முதல் அதிர்ச்சி: இங்கிலாந்தை சாய்த்தது நெதர்லாந்து!

டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தது நெதர்லாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த "பி' பிரிவு லீக் போட்டி ரசிகர்களுக்கு கடைசிவரை விருந்து படைத்திருந்தது."டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி, எதிரணியை முதலில் பேட் செய்யக் கேட்டுக் கொண்டது. இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது.அடுத்து ஆடிய நெதர்லாந்து...

20-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது?

ஐ.சி.சி. 20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தற்போது லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடைசியாக நடைபெற்ற ஐ.சி.சி 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய பாகிஸ்தான் அணிகள் பங்கு பற்றின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் இறுதி நேரத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, 20-20 உலக சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.2020 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது பிரபல்யம் அடைந்து வருகின்ற போதிலும், தற்போது உலகக் கிண்ணப் போட்டியில்...

தோனி,செவாக்கிடையே பனிப்போர் இந்திய அணியில் கருத்து வேறுபாடு

இரண்டாவது 20 ஓவர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், இந்திய அணியில் கருத்து வேறுபாடிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணிக் கப்டன் தோனிக்கும் துணைக்கப்டன் செவாக்குக்குமிடையே பனிப்போர் நடந்து வருவதாகவும் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தோள் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக செவாக் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. அவரது காயம் குறித்து கப்டன் தோனியிடம் நிருபர்கள்...