அவமானமா இருக்கே - கபில்தேவ் கவலை

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு, ஒரு கிரிக்கெட் வீரரான எனக்கு அவமானமாக உள்ளது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது. இது குறித்து கபில்தேவ் கூறியது:

ஆறு மாதத்திற்கு முன்பு "நம்பர்-1' அணியாக இருந்த போது, அணியில் இடம் பெற்றிருந்த அதே வீரர்கள் தான் தற்போதும் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இவர்களது மோசமான ஆட்டம், ஒரு கிரிக்கெட் வீரராக என்னை அவமானம் அடையச் செய்கிறது. மூன்று போட்டியிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எதிலுமே சரியாக செயல்படவில்லை.

டெஸ்ட் போட்டி என்பது ஐந்து நாட்கள் நடக்கக்கூடியது. இதிலும் நம்முடைய வீரர்கள் ஏமாற்றத்தான் செய்தனர். உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. நமது அணி சரிவை நோக்கி செல்கிறது. அதிலிருந்து மீள வேண்டும்.

வீரர்கள், தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். குழுவாக இணைந்து செயல்பட முயற்சிக்க வேண்டும். அவர்களின் அனைத்து முயற்சிக்கும் ஆதரவு தர தயாராக உள்ளோம்.

இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

0 comments:

Post a Comment