யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படுவாரா?

ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள சர்வதேச "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வு, வரும் 15ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் "உலக கோப்பை தொடர் நாயகன்' யுவராஜ் சிங் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முதற்கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்பின், இரண்டு சர்வதேச "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் மூன்றாவது அணியாக இலங்கை விளையாடுகிறது.

இரண்டு சர்வதேச "டுவென்டி-20' போட்டிகள் சிட்னி (பிப்., 1) மற்றும் பெல்போர்ன் (பிப்., 3) நகரில் நடக்கிறது.

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி பிப்., 5ம் தேதி மெல்போர்னில் நடக்கிறது.

இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய வீரர்களின் தேர்வு, வரும் 15ம் தேதி பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் சென்னையில் நடக்கிறது.

இதில் "ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஓய்வில் இருக்கும் இவர், தற்போது முழுமையாக குணமடைந்து, பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

0 comments:

Post a Comment