முத்தரப்பு தொடரில் சச்சின் - இந்திய அணி அறிவிப்பு

முத்தரப்பு தொடருக்கான இந்திய அணியில் சச்சின் இடம் பெற்றார். மிக நீண்ட இடைவெளிக்கு பின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்.

தற்போதைய டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில்(பிப்., 1, பிப்., 3) விளையாட உள்ளன. பின் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர்(பிப்., 5- மார்ச் 8) நடக்க உள்ளது.

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சச்சின் பெயரும் இடம் பெற்றுள்ளது. "டுவென்டி-20' போட்டியில் இருந்து ஏற்கனவே விலகி விட்ட இவர், முத்தரப்பு தொடரில் விளையாட உள்ளார்.

கடந்த ஏப்., 2ல் நடந்த உலக கோப்பை பைனலுக்கு பின், மீண்டும் ஒருநாள் போட்டிகளில் களமிறங்க உள்ளார். தனது 100வது சர்வதேச சதத்தை முத்தரப்பு தொடரில் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


யுவராஜ் "நோ':

காயத்தில் இருந்து மீண்ட பிரவீண் குமார், இர்பான் பதான், "ஸ்பின்னர்' ராகுல் சர்மா, மனோஜ் திவாரி, பார்த்திவ் படேல் வாய்ப்பு பெற்றுள்ளனர். தற்போதைய டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள இஷாந்த் சர்மா, விரிதிமான் சகா நீக்கப்படுகின்றனர்.

காயத்தில் இருந்து மீளாத யுவராஜ், ஹர்பஜன் சிங், வருண் ஆரோன், முனாப் படேல் இடம்பெறவில்லை.

"டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:

தோனி(கேப்டன்), சேவக்(துணை கேப்டன்), சச்சின், காம்பிர், விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், பிரவீண் குமார், வினய் குமார், மனோஜ் திவாரி, ராகுல் சர்மா, பார்த்திவ் படேல், இர்பான் பதான், ஜாகிர் கான்.

0 comments:

Post a Comment