பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டம் - மீண்டும் ஏமாற்றிய சச்சின்

சிட்னி டெஸ்டில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது. 41 ரன்னுக்கு அவுட்டாகிய சச்சின், 100வது சர்வதேச சதம் அடிக்க மீண்டும் தவறினார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. "டாஸ் வென்ற தோனி "பேட்டிங் தேர்வு செய்தார். துவக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.

முதலில் காம்பிர் "டக் அவுட்டாகி சரிவைத் துவங்கி வைத்தார். சிறிது நேரத்தில் "சீனியர் டிராவிட்டும் (5) ஏமாற்றினார்.

சற்று நேரம் போராடிய சேவக் 30 ரன்கள் எடுத்தார். லட்சுமண் (2) மறுபடியும் சொதப்பினார். விராத் கோஹ்லி (23) ஏமாற்றினார்.

பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சச்சின், 41 ரன்களுக்கு அவுட்டாகி, மீண்டும் சதத்தில் சதம் அடிக்கும் சாதனையை நழுவ விட்டார். சற்று தாக்குப்பிடித்த அஷ்வின் 20 ரன்கள் எடுத்தார்.

ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மூவரும் "டக் அவுட்டாகினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரைசதம் அடித்த தோனி (57) அவுட்டாகாமல் இருந்தார்.

பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் வார்னர் (8), மார்ஷ் (0), கோவன் (16) விக்கெட்டுகளை இழந்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது.

பாண்டிங் (44), கிளார்க் (47) அவுட்டாகாமல் இருந்தனர். ஜாகிர் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

0 comments:

Post a Comment