இலங்கையில் ஐ.பி.எல்., போட்டிகள்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' தொடரை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு நடக்கும் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் ஒரு சில போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு தலைவர் தர்மதாசா கூறுகையில்,"" ஐ.பி.எல்., போட்டிகளை நடத்துவதன் மூலம் இலங்கைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர்.

கிரிக்கெட் போர்டும் நல்ல வளர்ச்சி பெறும். இது குறித்து பி.சி.சி.ஐ.,யிடம் ஏற்கனவே பேசியுள்ளோம். இதற்கு ஒத்துழைப்பு தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

தவிர, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒரு நாள் உள்ளிட்ட போட்டிகளும் ஆண்டிற்கு மூன்று முறை நடந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன்,'' என்றார்.

0 comments:

Post a Comment