இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதால், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. பவுலிங்கில் எழுச்சி பெற்ற உமேஷ் யாதவ், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட், பெர்த்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 149 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர்( 104), கோவன் (40) அவுட்டாகாமல் இருந்தனர்.


உமேஷ் அபாரம்:

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. இம்முறை உமேஷ் யாதவ் பவுலிங்கில் அசத்தினார். இவரது வேகத்தில் கோவன் (74), பாண்டிங் (7) போல்டாகினர். மார்ஷ்சும் 11 ரன்னில் அவுட்டாகினார். வார்னரை (180) இஷாந்த் சர்மா வெளியேற்றினார். கிளார்க் 18 ரன்கள் எடுத்தார்.

ஹாடின் "டக் ஆனார். ஹசி (14), சிடில் (30), ஹாரிஸ் (9) நிலைக்கவில்லை. ஹில்பெனாஸ் (6) சேவக் சுழலில் வீழ்ந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 208 ரன்கள் முன்னிலை பெற்றது. ஸ்டார்க் (15) அவுட்டாகாமல் இருந்தார்.

பவுலிங்கில் அசத்திய உமேஷ் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். ஜாகிர் கான் 2, வினய் குமார், இஷாந்த் சர்மா, சேவக் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.


சச்சின் "அவுட்:

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு காம்பிர் (14), சேவக் (10) இருவரும் அதிர்ச்சி தந்தனர். சச்சின் 8 ரன்களுக்கு அவுட்டாகி, மீண்டும் சதத்தில் சதம் அடிக்காமல் ஏமாற்றினார்.

லட்சு"மண் "டக் அவுட்டாகினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு, 88 ரன்கள் எடுத்து, 120 ரன்கள் பின்தங்கி இருந்தது. டிராவிட் (32), கோஹ்லி (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

0 comments:

Post a Comment