சச்சினுக்கு பாரத ரத்னா "நோ'

சச்சினுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு இல்லை. இவரது பெயரை பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவில்லை.

நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது கலை, இலக்கியம் மற்றும் பொது சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில், அனைத்து துறைகளிலும் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விளையாட்டு நட்சத்திரங்களும் பாரத ரத்னா விருது பெறும் தகுதியை பெற்றனர்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு இவ்விருதை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரத்தில் மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்த்திற்கு தான் முதலில் கவுரவம் அளிக்க வேண்டும் என, இன்னொரு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாரத ரத்னா விருதுக்கு சச்சின் பெயரை இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்யவில்லை. தியான் சந்த், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மறைந்த டென்சிங் நார்கே ஆகியோரது பெயரை மட்டும் இவ்விருதுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,""தனிப்பட்ட வீரர்கள் தான் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பின் அரசு அமைத்த குழு இறுதி முடிவு எடுக்கும்.

பத்ம ஸ்ரீ போன்ற விருதுகளை சச்சின் வாங்கிய போது, பி.சி.சி.ஐ., அவரது பெயரை பரிந்துரை செய்யவில்லை,''என்றார்.

இதற்கிடையே பாரத ரத்னா விருதுக்கு இம்முறை யாரையும் தேர்வு செய்யப் போவதில்லை என முடிவு செய்திருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால், இம்முறையும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

0 comments:

Post a Comment