அணியில் பிளவை ஏற்படுத்துகிறார் சேவாக்

இந்திய அணி வீரர்களிடையே துணை கேப்டன் வீரேந்திர சேவாக், பிளவை ஏற்படுத்துகிறார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் "ஹெரால்டு சன்' வெளியிட்டுள்ள செய்தியில், "அணி வீரர்களிடையே பிளவை ஏற்படுத்தும் கருத்துகளைக் கொண்டுள்ளார் சேவாக்' என்று கூறியுள்ளது. இந்திய அணி வீரர்களிடையே ஒற்றுமையில்லை.

அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அணிக்கு யார் கேப்டனாக இருப்பது என்பதில் இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில வீரர்கள் சேவாக் கேப்டனாக வரவேண்டும் என்றும், சில வீரர்கள் தோனியே கேப்டனாகத் தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, "உலகில் உள்ள மற்ற அணிகளோடு ஒப்பிடும்போது இந்திய அணி விரைவாக சுருண்டுவிடும். அந்த அணி எப்போதெல்லாம் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறதோ, அப்போது அந்த அணி வீரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள்' என்று ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், "சிட்னி ஹெரால்டு' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், "ஹாடின் அவரது விக்கெட் கீப்பர் பணியில் மட்டும் கவனம் செலுத்தட்டும். மற்றதைப் பற்றிப் பேச வேண்டாம்.

இந்திய வீரர்களுக்கு மனதளவில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காகவே ஹாடின் இவ்வாறு பேசியுள்ளார்' என்றார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்டு பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், இப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமின்றி, ஊடகங்களும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

0 comments:

Post a Comment