கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்

கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக டிரவர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், ஆண்டுதோரும் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோர் இருந்தார்.

சமீபத்தில் இவரை, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்க, அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து முறைப்படி விலகினார்.

இவருக்கு மாற்று பயிற்சியாளராக, முன்னாள் இலங்கை அணியின் பயிற்சியாளர் டிரவர் பெய்லிசை, நேற்று கோல்கட்டா அணி நிர்வாகம் நியமித்தது.

இவரது பயிற்சியின் கீழ், இலங்கை அணி கடந்த 2009ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை மற்றும் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் பைனலுக்கு முன்னேறியது.

இதுகுறித்து கோல்கட்டா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கூறுகையில், ""கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக டிரவர் பெய்லிசை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவரது அனுபவம், கோல்கட்டா அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.

பெய்லிஸ் கூறுகையில், ""கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்ததற்கு, அணி நிர்வாகத்தினருக்கும், அதன் சீனியர் வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக நடந்த ஐ.பி.எல்., தொடர்களை பார்த்துள்ளேன்.

இதில் கோல்கட்டா அணியினரின் செயல்பாட்டினை நன்கு அறிந்துள்ளேன். ஒவ்வொரு வீரரின் திறமைக்கேற்ப பயிற்சி அளித்து, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன்,'' என்றார்.

0 comments:

Post a Comment