இந்திய பேட்ஸ்மேன்கள் காகிதப்புலிகள்

இந்திய பேட்ஸ்மேன்கள் காகித புலிகளாக உள்ளனர். களத்தில் தொடர்ந்து சொதப்பும் இந்த வயதான வீரர்கள் தேவைதானா'' என ஆஸ்திரேலிய "மீடியா'க்கள் சாடியுள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடக்கிறது. மெல்போர்னில் 122 ரன்கள் வித்தியாசம், சிட்னி டெஸ்டில் இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்த இந்திய அணி, தொடரில் 0-2 என பின்தங்கியுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளின் செய்திகள்:


"ஆஸ்திரேலியன் அசோசியேட் பிரஸ்'

காகித அளவில் பார்த்தால், இந்திய டெஸ்ட் அணியின் "பேட்டிங்' படை, இதுவரை பார்த்திராத அளவில் அஞ்சத்தக்க வகையில் இருந்தது. ஆனால் உண்மையில் இவர்களுக்கு வயதாகிவிட்டது. அனுபவம் பயனற்றதாகி விட்டது.

டிராவிட், சச்சின் 39 வயதை நெருங்குகின்றனர். லட்சுமண் 37ல் உள்ளார். இவர்களை வைத்து தான் சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி மோசமாக தோற்றது. தற்போது ஆஸ்திரேலிய தொடரில் பின்தங்கியுள்ளது. இவையெல்லாம் ஏதோ கெட்ட செய்தியை உணர்த்துகின்றன.

சாம்பியன் வீரர்கள் அதிகம் நிறைந்திருப்பது எப்போதும் அணிக்கு ஆபத்து தான் தரும். இந்த மும்மூர்த்திகள் தவிர, சேவக், கேப்டன் தோனியும் சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்திய அணி "நம்பர்-1' இடத்தை இங்கிலாந்திடம் இழக்கும் முன், இந்த சீனியர் வீரர்கள் பெரிய "பார்ட்னர்ஷிப்' அமைத்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். இப்போது அதுபோல நிகழவில்லை. இவர்களது வயது குறித்து கேள்விகள் எழுகின்றன.


"சிட்னி மார்னிங் ஹெரால்டு'

சிட்னி மைதானம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என மிகைப்படுத்தப்பட்ட வதந்தி இருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்குப் பின்னும் சச்சின், லட்சுமண் களத்தில் இருந்த போது, இந்திய அணி மீண்டுவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. சச்சின், லட்சுமண் வெளியேறிய பின், மற்ற வீரர்கள் வழக்கம் போல போவதும் வருவதுமாக இருக்க, கிளார்க் மடியில் வெற்றி விழுந்தது.


"தி ஆஸ்திரேலியன்'

கிளார்க், சச்சினின் ஒரு விக்கெட்டை மட்டும் தான் வீழ்த்தினார். இது ஐந்து விக்கெட் எடுத்ததற்கு சமம். எப்போது சச்சின் அவுட்டானாரோ, அது மற்ற வீரர்களின் வெளியேற்றத்துக்கான வாசல் கதவை திறந்து விட்டது.


"ஹெரால்டு சன்'

பெரிய பேட்டிங் படை கொண்ட இந்திய வீரர்களை, நான்கு நாட்களில் வீழ்த்தி, இரு வாரத்தில் இருமுறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது. கேப்டன், ஒருநாள் 300 ரன்கள் எடுக்கிறார். மறுநாள் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி, 100வது சத சாதனையை தடுக்கிறார். இவர் கேப்டனாக இனி செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.


"டெய்லி டெலிகிராப்'

சொந்த மண்ணில் கிளார்க் அடித்த "டிரிபிள்' சதம், என்றென்றும் நினைவில் நீடித்து இருக்கும். சரியான நேரத்தில் பாண்டிங், ஹசி சதம் அடித்தனர்.

இவ்வாறு அவை தெரிவித்து இருந்தன.

0 comments:

Post a Comment