திராட்சை தோட்டத்தில் தோனி

ஆஸ்திரேலிய மண்ணில் சந்தித்த டெஸ்ட் தொடர் தோல்வியை எண்ணி தோனி கவலைப்பட்டதாக தெரியவில்லை. அடிலெய்டில் உள்ள திராட்சை தோட்டத்தில், மனைவி சாக்ஷியுடன் உலா வந்து உற்சாகமாக பொழுதை கழித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இதில், பெர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தாமதமாக பந்துவீசிய பிரச்னையில் சிக்கிய, தோனிக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

வரும் 24ம் தேதி துவங்கும் நான்காவது போட்டிக்கு சேவக், கேப்டனாக செயல்பட உள்ளார். இப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் அடிலெய்டு வந்தனர்.

தோனியை பொறுத்தவரை, தடை காரணமாக நிறைய நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. நேற்று அடிலெய்டில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு மனைவி சாக்ஷியுடன் சென்று சுற்றிப் பார்த்திருக்கிறார்.

இங்குள்ள மலைகளில் 50க்கும் மேற்பட்ட திராட்சை தோட்டங்கள் உள்ளன. இதில் இருந்து தயாரிக்கப்படும் "ஒயின்' மிகவும் பிரபலம். கடந்த 1844ல் விக்டோரியா மகாராணிக்கே அடிலெய்டில் இருந்து தான் "ஒயின்' அனுப்பப்பட்டதாம்.

தொடர் தோல்வியை அடுத்து, இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு "ஹனிமூன்' சென்றார்களா...சுற்றுலா சென்றார்களா என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் திராட்சை தோட்டத்தில் தோனி, உலா வந்தது புதிய பிரச்னைக்கு வழிவகுத்துள்ளது.

இதற்கிடையே, திராட்சை தோட்டத்துக்கு வீரர்கள் யாரும் செல்லவில்லை என, இந்திய அணியின் "மீடியா' மானேஜர் ஜி.எஸ். வாலியா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment