ரேங்கிங் - இந்தியா மீண்டும் நம்பர்-2

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்திய அணி மீண்டும் "நம்பர்-2' இடத்துக்கு முன்னேறியது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் மீண்டும் இரண்டாவது இடம் பிடித்தது.

இரண்டாவது இடத்தில் இருந்த தென் ஆப்ரிக்க அணி 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்க அணி 3-2 என கைப்பற்றிய போதும், கடைசி இரண்டு போட்டியில் தோல்வி அடைந்ததால், பின்னடைவை சந்திக்க வேண்டியதாயிற்று.

ஆஸ்திரேலிய அணி 130 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இலங்கை அணி 111 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.


கோஹ்லி "நம்பர்-3':

ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 3வது, கேப்டன் தோனி 5வது இடத்தில் நீடிக்கின்றனர்.

தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, டிவிலியர்ஸ் முதலிரண்டு இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் சதம் அடித்த தென் ஆப்ரிக்காவின் ஸ்மித், 17வது இடத்துக்கு முன்னேறினார்.


இந்தியா ஏமாற்றம்:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், "டாப்-10' வரிசையில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (13வது இடம்), அஷ்வின் (19வது) "டாப்-20' வரிசையில் உள்ளனர்.

இலங்கைக்கு எதிராக வேகத்தில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் டசாட்சொபே, பத்து இடங்கள் முன்னேறி 3வது இடம் பிடித்தார். இலங்கையின் மலிங்கா, பத்தாவது இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், முகமது ஹபீஸ் முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.

0 comments:

Post a Comment