கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் தோனி

டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக சேவக் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது. முதலில் கேப்டன் மாற்றப்பட உள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் சேவக் இடையிலான "ஈகோ' பிரச்னைக்கு முடிவு காணலாம். கேப்டன்...

தரம் தாழ்ந்த ஆஸி., வீரர்கள்

ஆஸ்திரேலிய வீரர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக இந்தியாவின் விராத் கோஹ்லி குற்றம்சாட்டினார். இது குறித்து கோஹ்லி கூறியது:களத்தில் இருக்கும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து வசைபாடுகின்றனர். இதன் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதறடிக்கின்றனர். நான் 99 ரன்களில் இருந்த போது ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினேன். அப்போது ஹில்பெனாஸ் மோசமான வார்த்தைகளால் திட்டினார். இதை நாகரிகம் கருதி வெளியில் சொல்ல முடியாது. இதற்கு நானும் பதிலடி கொடுத்தேன்....

சச்சினுக்கு பாரத ரத்னா "நோ'

சச்சினுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு இல்லை. இவரது பெயரை பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவில்லை.நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது கலை, இலக்கியம் மற்றும் பொது சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில், அனைத்து துறைகளிலும் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விளையாட்டு நட்சத்திரங்களும் பாரத ரத்னா விருது பெறும் தகுதியை பெற்றனர். இந்திய அணியின் "மாஸ்டர்...

ரேங்கிங் - இந்தியா மீண்டும் நம்பர்-2

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்திய அணி மீண்டும் "நம்பர்-2' இடத்துக்கு முன்னேறியது.சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் மீண்டும் இரண்டாவது இடம் பிடித்தது. இரண்டாவது இடத்தில் இருந்த தென் ஆப்ரிக்க அணி 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை...

கிரிக்கெட் "கடவுள்' சச்சின் - சொல்கிறார் ஹசி

தற்போதைய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கிரிக்கெட் "கடவுள்' சச்சின், 100வது சதம் அடிப்பது தவிர்க்க முடியாதது,'' என்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி.கடந்த 10 டெஸ்ட் போட்டிகளின், 19 இன்னிங்ஸ்களாக இந்திய பேட்டிங் மாஸ்டர் சச்சின் தனது, 100வது சதத்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதுகுறித்து மைக் ஹசி கூறியது:சச்சின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். சரியான "புட் வொர்க்கில்', பந்தை நோக்கி பேட்டினை கொண்டு செல்லும் திறன்...

புனே வாரியர்ஸ் அணியில் கங்குலிக்கு புது வேலை

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. நீண்ட இழுபறிக்குப் பின், ஆஷிஸ் நெஹ்ராவுக்குப் பதில், இவரை கடந்த ஆண்டு புனே வாரியர்ஸ் அணி வாங்கியது. இதனிடையே புனே அணியின் பயிற்சியாளராக இருந்த ஜெப் மார்ஷ், இலங்கை அணிக்கு சென்று விட்டார். இதனால், வரும் ஐந்தாவது சீசனில் கங்குலி வீரராக மட்டுமன்றி, அணியின் ஆலோசகராவும் செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு நியமிக்கப்பட்டார். பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரவீண் ஆம்ரேவும், மனநல பயிற்சிக்கு பட்டி...

அடிலெய்டில் சேவக் அடிப்பாரா? அடிபடுவாரா?

அன்னிய மண்ணில் சேவக்கின் மோசமான ஆட்டம் தொடர்கிறது. கடந்த 21 இன்னிங்சில் இரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ள இவர், அடிலெய்டு டெஸ்டில் மானம் காப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.சமீபகாலமாக அன்னிய மண்ணில் இந்திய டெஸ்ட் அணியின் துவக்கம் மோசமாக உள்ளது. இதனால் பின் வரிசை வீரர்கள் நெருக்கடிக்கு ஆளாகி, எளிதில் அவுட்டாக, தொடர் தோல்வியை அணி சந்திக்கிறது. இதில் அதிரடி வீரர் சேவக், நான்கு ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நியூசிலாந்து,...

அவமானமா இருக்கே - கபில்தேவ் கவலை

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு, ஒரு கிரிக்கெட் வீரரான எனக்கு அவமானமாக உள்ளது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது. இது குறித்து கபில்தேவ் கூறியது:ஆறு மாதத்திற்கு முன்பு "நம்பர்-1' அணியாக இருந்த போது, அணியில் இடம் பெற்றிருந்த அதே வீரர்கள் தான் தற்போதும் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் இவர்களது மோசமான ஆட்டம், ஒரு கிரிக்கெட் வீரராக என்னை...

திராட்சை தோட்டத்தில் தோனி

ஆஸ்திரேலிய மண்ணில் சந்தித்த டெஸ்ட் தொடர் தோல்வியை எண்ணி தோனி கவலைப்பட்டதாக தெரியவில்லை. அடிலெய்டில் உள்ள திராட்சை தோட்டத்தில், மனைவி சாக்ஷியுடன் உலா வந்து உற்சாகமாக பொழுதை கழித்தார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இதில், பெர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தாமதமாக பந்துவீசிய பிரச்னையில் சிக்கிய, தோனிக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. வரும் 24ம் தேதி துவங்கும் நான்காவது போட்டிக்கு...

இந்திய அணியின் தோல்விக்கு ஐ.பி.எல்., காரணமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு, ஐ.பி.எல்., போட்டிகள் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இதற்கு பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளில் அதிகளவு பங்கேற்றதே காரணம் என கூறப்படுகிறது. இது குறித்த தங்களது கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பகிர்ந்து கொள்கின்றனர், வெங்சர்க்கார்: இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்துக்கு...

உதவாக்கரை இந்திய அணி

டெஸ்ட் தொடரில் சொதப்பிய இந்திய அணியை, ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கடுமையாக சாடியுள்ளன. ரன் எடுக்க திணறிய பேட்ஸ்மேன்களை, உதவாக்கரை என படுமோசமாக விமர்சித்துள்ளன.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரிசையாக முதல் மூன்று டெஸ்டில் வீழ்ந்த இந்திய அணி, தொடரை 3-0 என இழந்தது. இத்தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு படுமோசமாக இருந்தது. ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய பத்திரிகைகள்...

முத்தரப்பு தொடரில் சச்சின் - இந்திய அணி அறிவிப்பு

முத்தரப்பு தொடருக்கான இந்திய அணியில் சச்சின் இடம் பெற்றார். மிக நீண்ட இடைவெளிக்கு பின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார். தற்போதைய டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில்(பிப்., 1, பிப்., 3) விளையாட உள்ளன. பின் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர்(பிப்., 5- மார்ச் 8) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சச்சின் பெயரும் இடம் பெற்றுள்ளது....

தோனிக்கு தடை: சேவக் புதிய கேப்டன்

இந்திய அணிக்கு சோதனை மேல் சோதனை. தாமதமாக பந்துவீசிய விவகாரத்தில், தோனிக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. நான்காவது டெஸ்டுக்கு கேப்டன் பொறுப்பை சேவக் ஏற்கிறார்.பெர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இப்போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் நான்கு "வேகங்களுடன்' இந்தியா களமிறங்கியது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில், 2 ஓவர்கள் தாமதமாக பந்துவீச நேர்ந்தது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) விதிமுறைப்படி தவறு....

கேப்டன் தோனியை நீக்க வேண்டும்

தோனியை டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சீனியர் வீரர்கள் லட்சுமண், டிராவிட் இருவரும் ஓய்வு பெற வேண்டும்,'' என, கங்குலி உள்ளிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முதல் இரண்டு டெஸ்டில் தோல்வியடைந்தது. பெர்த்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்டிலும் மோசமான நிலையில் உள்ளது. தோனி வேண்டாம்:இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மதன் லால் கூறுகையில்,""டெஸ்ட் கேப்டன்...

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதால், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. பவுலிங்கில் எழுச்சி பெற்ற உமேஷ் யாதவ், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட், பெர்த்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 149 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர்( 104), கோவன் (40) அவுட்டாகாமல் இருந்தனர்.உமேஷ் அபாரம்:இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. இம்முறை உமேஷ் யாதவ் பவுலிங்கில்...

இந்திய அணியின் கடைசி வாய்ப்பு

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் இந்திய அணி 0-2 என பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட், பெர்த் மைதானத்தில் இன்று துவங்குகிறது.இது குறித்து அக்ரம் கூறியது:பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சு சாதகமாகவும், நன்கு "பவுன்ஸ்' ஆகும். இங்கு பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில்...

அணியில் பிளவை ஏற்படுத்துகிறார் சேவாக்

இந்திய அணி வீரர்களிடையே துணை கேப்டன் வீரேந்திர சேவாக், பிளவை ஏற்படுத்துகிறார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் "ஹெரால்டு சன்' வெளியிட்டுள்ள செய்தியில், "அணி வீரர்களிடையே பிளவை ஏற்படுத்தும் கருத்துகளைக் கொண்டுள்ளார் சேவாக்' என்று கூறியுள்ளது. இந்திய அணி வீரர்களிடையே ஒற்றுமையில்லை. அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகையில்...

யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படுவாரா?

ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள சர்வதேச "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வு, வரும் 15ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் "உலக கோப்பை தொடர் நாயகன்' யுவராஜ் சிங் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முதற்கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்பின், இரண்டு சர்வதேச "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் மூன்றாவது அணியாக...

பயிற்சிக்கு "நோ' சொன்ன வீரர்கள்

டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய வீரர்கள் திருந்தவே இல்லை. தீவிர பயிற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக, "கோ- கார்ட்டிங்' ரேசில் பங்கேற்று சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணி, முதலிரண்டு டெஸ்டில் தோல்வி அடைந்தது. முக்கியமான மூன்றாவது டெஸ்ட் வரும் 13ம் தேதி பெர்த்தில் துவங்குகிறது. இதில், சாதிப்பதற்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "கோ-கார்ட்டிங்' எனப்படும் சிறிய வகை கார் ரேசில்...

ரேங்கிங்: இந்தியா பின்னடைவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி "டிரா' (2-2) செய்தால் கூட, ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில், இங்கிலாந்து (125), இந்தியா (118), தென் ஆப்ரிக்கா (117), ஆஸ்திரேலியா (103) முதல் நான்கு இடங்களில் உள்ளன. இதில் இந்திய அணி, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி...

இந்திய பேட்ஸ்மேன்கள் காகிதப்புலிகள்

இந்திய பேட்ஸ்மேன்கள் காகித புலிகளாக உள்ளனர். களத்தில் தொடர்ந்து சொதப்பும் இந்த வயதான வீரர்கள் தேவைதானா'' என ஆஸ்திரேலிய "மீடியா'க்கள் சாடியுள்ளன.இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடக்கிறது. மெல்போர்னில் 122 ரன்கள் வித்தியாசம், சிட்னி டெஸ்டில் இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்த இந்திய அணி, தொடரில் 0-2 என பின்தங்கியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளின் செய்திகள்:"ஆஸ்திரேலியன்...

54 நாட்கள்...76 போட்டிகள்: ஐ.பி.எல்., அட்டவணை அறிவிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், சென்னையில் வரும் ஏப்ரல் 4ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 54 நாட்களில் மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளன. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், ஆண்டுதோரும் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர், வரும் ஏப்ரல் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இத்தொடருக்கான...

100வது சதத்தைப் பற்றி நினைக்கவில்லை

100-வது சதத்தைப் பற்றிய சிந்தனையின்றி போட்டியை மிகவும் ரசித்து விளையாடுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறேன் என்று சச்சின் கூறியுள்ளார். சச்சினின் 100-வது சதத்தை எதிர்நோக்கி உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவர் மேலும் கூறியது: 100-வது சதம் என்பது வெறும் எண்ணிக்கைதானே என்று சொல்வது எளிது. ஆனால் அதை அடிப்பது கடினம். 100-வது சதம் குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் நான் போட்டியை ரசித்து விளையாடவே விரும்புகிறேன். ரசிப்புத் தன்மை மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியோடு...

இலங்கையில் ஐ.பி.எல்., போட்டிகள்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' தொடரை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடக்கும் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் ஒரு சில போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு தலைவர் தர்மதாசா கூறுகையில்,"" ஐ.பி.எல்., போட்டிகளை நடத்துவதன் மூலம் இலங்கைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். கிரிக்கெட் போர்டும் நல்ல வளர்ச்சி பெறும். இது குறித்து பி.சி.சி.ஐ.,யிடம் ஏற்கனவே பேசியுள்ளோம். இதற்கு ஒத்துழைப்பு தருவார்கள் என எதிர்பார்க்கிறேன். தவிர, இந்தியா,...

கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்

கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக டிரவர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், ஆண்டுதோரும் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோர் இருந்தார். சமீபத்தில் இவரை, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்க, அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் பதவியில்...

பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டம் - மீண்டும் ஏமாற்றிய சச்சின்

சிட்னி டெஸ்டில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது. 41 ரன்னுக்கு அவுட்டாகிய சச்சின், 100வது சர்வதேச சதம் அடிக்க மீண்டும் தவறினார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. "டாஸ் வென்ற தோனி "பேட்டிங் தேர்வு செய்தார். துவக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டினர். முதலில் காம்பிர் "டக் அவுட்டாகி சரிவைத் துவங்கி வைத்தார். சிறிது நேரத்தில்...