உலக கோப்பை காணவில்லை

தென் ஆப்ரிக்காவிலுள்ள சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தற்காலிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த, உலக கோப்பை மாதிரியை காணவில்லை. 

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

 உலக கோப்பை தொடர் நடக்கும் வேளையில் தென் ஆப்ரிக்காவில் திருட்டு மற்றம் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் உச்சகட்டமாக, இத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப் படவுள்ள உலக கோப்பையை மாதிரியை திருடிச் சென்றுள்ளனர். 

பொதுவாக சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் தங்க கோப்பையை, அந்த அணிகள் சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாது. நான்கு ஆண்டுகள் கழித்து அவற்றை "பிபா' விடம் ஒப்படைத்துவிட வேண்டும். மாறாக அவற்றுக்குப் பதில் மாதிரி கோப்பை வழங்கப்படும்.

இந்த மாதிரி கோப்பை, பிபா அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதை வரும் ஜூலை 11ம் தேதி பைனல் நடக்கும் போது, மைதானத்தில் அமைக்கப்படும் மேடையில் வைக்க இருந்தனர். ஆனால், தற்போது இந்த கோப்பை திருடு போயுள்ளது. 

இதுகுறித்து தேசிய போலீஸ் கமிஷனர் பேகி செலே கூறுகையில்,"" மாதிரி கோப்பை மற்றும் அங்கு வைக்கப்பட்டு இருந்த பிற விளையாட்டு பொருட்கள் திருடு போனது உண்மை தான். இது பற்றி விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

0 comments:

Post a Comment