சச்சினுக்காக உலக கோப்பை

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்காக, வரும் 2011ம் ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும்,'' என முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டேனி மோரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் இணைந்து, வரும் 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. கடந்த 1992ம் ஆண்டு முதல், 5 உலக கோப்பை தொடரில் விளையாடிய இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, ஒரு முறைகூட தனது அணிக்கு உலக கோப்பை பெற்றுத்தந்ததில்லை என்ற ஏக்கம் உள்ளது.

இம்முறை உலக கோப்பை தொடர் இந்திய துணைக்கண்டங்களில் நடக்க இருப்பதால், இவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டேனி மோரிசன் கூறியதாவது: வரும் 2011ல் நடக்க உள்ள <உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும். இதன்மூலம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிடும். இதற்கு சச்சின் மட்டும் போராடினால் போதாது. இவருடன் யுவராஜ், சேவக், தோனி, காம்பிர் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இம்முறை இந்திய துணைக் கண்டங்களில் உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதால், இந்திய அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். ஏனெனில் கிரிக்கெட் போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். போட்டியின் போது இந்திய அணிக்கு நெருக்கடி இருந்த போதிலும், சொந்த மண்ணில் விளையாடுவது கைகொடுக்கும்.

எனவே கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது போல, இம்முறை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் விளையாடும் இந்திய அணி கோப்பை வெல்லும் என நம்புகிறேன்.
இவ்வாறு டேனி மோரிசன் கூறினார்.

0 comments:

Post a Comment