முரளிதரன் சுழல் கடினமானது

ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியுடன், இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தவிர, 133 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

இதுகுறித்து கங்குலி கூறியதாவது:

டெஸ்ட் அரங்கில், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்த முரளிதரனுக்கு வாழ்த்துகள். இவரை யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், இவருக்கு போட்டியாக கருதப்பட்டார்.

இவர்களது சுழற்பந்துவீச்சை ஒப்பிடும் போது, முரளிதரன் சுழலை எதிர்கொள்வது சற்று கடினமானது. மிகவும் கவனமாக விளையாடினால் மட்டுமே, அவுட்டாகாமல் தப்பிக்க முடியும்.

முரளிதரன் சாதனையை முறியடிப்பது சாதாரன விஷயமல்ல. இதற்கு கடுமையாக போராட வேண்டும். சிறந்த வீரர்கள் அனைவரும், புகழின் உச்சியில் இருக்கும் போது ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

இதேபோலதான் முரளிதரன், நல்ல "பார்மில்' இருக்கும் போது ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக வார்ன், கவாஸ்கர், மெக்ராத் உள்ளிட்டோரும் இதுபோன்று ஓய்வு பெற்றனர். இதேபோல மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும், புகழின் உச்சியில் இருக்கும் போது ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கருதவேண்டாம். ஒருநாள், "டுவென்டி-20', ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து சாதிக்க காத்திருக்கிறார்.

முரளிதரனின் ஓய்வு, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மனநிறைவு அளித்திருக்கும். இதனால் இவர்கள் அடுத்து வரும் டெஸ்டில், லசித் மலிங்காவின் பந்துவீச்சை சமாளித்தால் போதுமானது.
இவ்வாறு கங்குலி கூறினார்.

0 comments:

Post a Comment