800 விக்கெட்: முரளீதரன் முனைப்பு

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற முனைப்புடன் பயிற்சி எடுத்து வருகிறார் முத்தையா முரளீதரன்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 792 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலே நகரில் தொடங்கும் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையோன தொடரின் முதல் ஆட்டத்துடன் ஓய்வு பெறப் போவதாகவும் அதன் பின்னர் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடப் போவதாகவும் முரளீதரன் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் 792 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள 38 வயதாகும் முரளிதரனுக்கு இது கடைசி டெஸ்ட் ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் மேலும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை அவர் பெற முடியும். இதற்காக அவர் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி கூறுகையில், "அந்த வாய்ப்பை எளிதில் நாங்கள் அவருக்கு கொடுத்து விட மாட்டோம். ஆட்டத்தின் போது அவருக்கு கடும் நெருக்கடி தர நாங்கள் முயற்சிப்போம்' என்றார்.

0 comments:

Post a Comment