மீண்டும் யுவராஜ் சிங் - ஆஸி., தொடருக்கு தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யுவராஜ் சிங், மீண்டும் இடம் பிடித்தார்.
 இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒரே ஒரு சர்வதேச "டுவென்டி-20' மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் 10ல் ராஜ்கோட்டில் துவங்குகிறது. 

ஒரு "டுவென்டி-20', மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு சென்னையில் இன்று அறிவித்தது. 

இதில், சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் "ஏ', சாலஞ்சர் டிராபி தொடரில் அசத்திய யுவராஜ் சிங், எதிர்பார்த்தது போல 9 மாத இடைவேளைக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

சமீபத்தில் நடந்த ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்ற புஜாரா, தினேஷ் கார்த்திக், ரகானே, மோகித் சர்மா, பர்வேஸ் ரசூல், உமேஷ் யாதவ் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டனர். அமித் மிஸ்ரா, அம்பதி ராயுடு, முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கத் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றனர். 

அணி விவரம்: தோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவிந்தர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஸ்ரா, அம்பதி ராயுடு, முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கத். 

0 comments:

Post a Comment