யூரோ 2020 கோப்பையை நடத்த பல நாடுகள் விருப்பம்

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யுஈஎப்ஏ அதன் உறுப்பு நாடுகளான 54ல் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. 

பாரம்பரியமாக இந்தப் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளால் நடத்தப்படும். ஆனால், 2020 ஆம் ஆண்டுப் போட்டிகள் ஐரோப்பாவின் 13 நாடுகளில் பகிர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வருடம் கால்பந்துப் போட்டித் தொடரின் 60 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதால் போட்டி அமைப்புகளில் மாற்றத்தைப் பற்றி இந்தக் கழகம் சென்ற டிசம்பர் மாதமே முடிவெடுத்திருந்தது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு போலந்து மற்றும் உக்ரேன் நாடுகள் நிகழ்த்திய போட்டிகளின்போதே மாற்றங்கள் குறித்து யுஈஎப்ஏ தலைவர் மைக்கேல் பிளாட்டினி யோசனை தெரிவித்திருந்தார். 

சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவிடம் டிசம்பர் மாதம் ஒப்புதல் பெற்று இந்த வருடம் ஜனவரி மாதம் போட்டி நடத்தும் விதம் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. உறுப்பினர் நாடுகளின் கால்பந்து சங்கங்களில் இருந்து இந்த மாற்றத்திற்கு வந்த வரவேற்பு குறித்து தலைவர் மைக்கேல் பிளாட்டினி மகிழ்ச்சி தெரிவித்தார்.



யூரோ பார் யூரோப் என்ற இந்தத் திட்டத்தின் வடிவம் யூரோ சாம்பியனான ஸ்பெயின் மற்றும் பாரம்பரிய கால்பந்து போட்டி நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், கிரீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மனுக்கள் பெறுவதற்கான இறுதி நாளாக அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதியையும், போட்டி நடத்தும் நாடுகள் குறித்து தெரிவிக்க செப்டம்பர் 25 ஆம் தேதியையும் யுஈஎப்ஏ குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment