யாருக்கு கோப்பை? சாதிக்குமா சென்னை அணி?



உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் அசத்திய அணிகள் மோதும், சாம்பியன்ஸ் லீக் தொடர் அதிரடியாக ஆரம்பமாகிறது. இதில் மும்பை, சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் கோப்பை வெல்ல களத்தில் குதித்துள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20'தொடரை நடத்துகின்றன. 

இதில் இந்தியாவில் இருந்து பிரிமியர் தொடர் சாம்பியன் மும்பை, இரண்டு மற்றும் 3வது இடம் பெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. 

தவிர, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ என, 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

மீதமுள்ள இரண்டு அணிகள் செப்., 17 முதல் 20 வரை நடந்த தகுதிச்சுற்றின் மூலம் தேர்வு பெற்றன. 


தோனி நம்பிக்கை:

சென்னை அணியை பொறுத்தவரையில், பிரிமியர் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும். ஆனால், சாம்பியன்ஸ் லீக் தொடர் என்றதும், அப்படியே தலை கீழ் நிலை தான். இதுவரை நடந்த நான்கு தொடர்களில் 2010ல் மட்டும் கோப்பை வென்றது. மற்றபடி 2009ல் தகுதி பெறவில்லை. 2011, 2012ல் லீக் சுற்றுடன் திரும்பியது. 

அடுத்த ஆண்டில் புதிய ஏலம் நடக்கிறது. இதனால், சென்னை அணி வீரர்கள் ஒருங்கிணைந்து அசத்த, இது தான் கடைசி வாய்ப்பு. இதற்கேற்ப கேப்டன் தோனி, சொந்தமண்ணில் ஏதாவது மாயம் நிகழ்த்துவார் என்று நம்பப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில், சமீபகாலமாக வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள தோனிக்கு, வழக்கம் போல முரளி விஜய் (14 போட்டி, 414 ரன்),ரெய்னா (14 போட்டி, 384 ரன்) கைகொடுக்க வேண்டும். 

சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 4, 5வது இடத்திலுள்ள இவர்களுடன் பத்ரிநாத்தும் உதவலாம். தவிர, கடந்த பிரிமியர் தொடரில் பேட்டிங்கில் எழுச்சி பெற்ற மைக்கேல் ஹசி இருப்பது கூடுதல் பலம்.

பவுலிங்கில் சமீபகாலமாக சர்வதேச அரங்கில் எழுச்சி பெற்றுள்ள ரவிந்திர ஜடேஜா, முக்கிய ஆயுதமாக இருப்பார். ஒருநாள் தரவரிசையில் "நம்பர்-1' பவுலராக உருவெடுத்துள்ள இவருடன், தமிழகத்தின் அஷ்வினும் இணைந்து வெற்றிதேடித் தரவேண்டும். தவிர, டுவைன் பிராவோ, ஆல்பி மார்கல், கிறிஸ் மோரிசும் உள்ளனர்.

0 comments:

Post a Comment