டோக்கியோ நகரில் 2020 ஒலிம்பிக் போட்டி



ஜப்பான் தலைநகர் டோக்கியோ வரும் 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது. ஐ.ஓ.சி.,யின் ஓட்டெடுப்பின் மூலம் இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) பொதுக்குழு கூட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில் நடக்கிறது. இதில், 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் இடத்திற்கான தேர்வு நடைபெற்றது. 

இதற்கு ஜப்பானின் டோக்கியோ, துருக்கியின் இஸ்தான்புல், ஸ்பெயினின் மாட்ரிட் ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையே போட்டி காணப்பட்டன. முதல் சுற்று ஓட்டெடுப்பில் மாட்ரிட் நகரம் தோல்வியடைந்தது. 

எனவே, அடுத்த சுற்றில் மற்ற இரு நகரத்தில் எது வெற்றி பெறும் என ஆர்வம் அதிகரித்தது. முடிவில், டோக்கியோ 60 வாக்குகள் பெற்று, 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை தட்டிச் சென்றது. 

இஸ்தான்புல் நகருக்கு 36 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம், ஜப்பான் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. ஏற்கனவே 1964 (டோக்கியோ), 1972 (சபோரோ, குளிர்கால), 1998 (நகனோ, குளிர்கால), ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. 

ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட கசிவு காரணமாக, டோக்கியோவுக்கு எதிர்ப்பும் இருந்தன. தற்போது, இதையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. 

இது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ஷா அபே கூறுகையில்,"" 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில், மகிழ்ச்சி அடைகிறேன். புகுஷிமா அணு உலை பாதுகாப்புடன்தான் உள்ளது. இதனால், டோக்கியாவுக்கு எந்தவித பாதிப்பும் வராது என உறுதி தருகிறேன்,'' என்றார். 

0 comments:

Post a Comment