சாம்பியன்ஸ் லீக் தொடரில் சிக்கல்



வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க, இந்தியா வர இருந்த, பாகிஸ்தான் உள்ளூர் அணிக்கு அனுமதி கிடைக்கவில்லை. 

ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் செப்., 21ல் துவங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து மும்பை, சென்னை, ராஜஸ்தான் என, மூன்று அணிகள் பங்கேற்கவுள்ளன. 

தவிர, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும். வரும் செப்., 17 முதல் 20 வரை நடக்கவுள்ள தகுதிச் சுற்றின் மூலம், மீதமுள்ள 2 அணிகள் தேர்வு செய்யப்படும்.

இதில் ஐதராபாத் (இந்தியா), ஒடாகோ வோல்ட்ஸ் (நியூசி.,), கண்டுரட்டா மரூன்ஸ் (இலங்கை) மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் வால்வ்ஸ் என, 4 அணிகள் விளையாட இருந்தன. 

ஆனால், சமீபத்தில் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதட்டமான நிலை காரணமாக, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

"இவர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க முடியாது,' என, மத்திய அரசு கைவிரித்தது. இதனால், பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைக்கவில்லை. இதனால், தகுதிச் சுற்றில் மூன்று அணிகளை மட்டும் வைத்து விளையாட, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

0 comments:

Post a Comment