ஓய்வு பெறும் முடிவில் அவசரப்படவில்லை - தெண்டுல்கர்



கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 

இதுவரை 198 டெஸ்டில் விளையாடி உள்ள தெண்டுல்கள் 200–வது டெஸ்டோடு ஒய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது. 

அதற்கு ஏற்றவாறு 200–வது டெஸ்ட் போட்டி இந்திய மண்ணில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியை நவம்பர் மாதம் இந்தியாவில் விளையாட அழைத்துள்ளது. முதலில் தென்ஆப்பிரிக்காவில் தான் அவரது 200–வது டெஸ்ட் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் ஓய்வு பெறும் முடிவில் நான் அவசரப்படவில்லை என்று தெண்டுல்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– 

நான் 23 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். மேலும் ஒரு அடியை எடுத்து வைக்க விரும்புகிறேன். நான் எல்லாவற்றையும் நினைத்து பார்ப்பது இல்லை. 

ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டிய அவசரம் எதுவும் எனக்கு இல்லை. நான் ஒரு கிரிக்கெட் வீரர்தான். கிரிக்கெட்டின் கடவுள் என்று குறிப்பிட வேண்டாம். நான் தவறுகளை செய்பவன். 

நாம் எல்லோரும் தவறுகள் செய்யக் கூடியவர்கள்தான். ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் நான் என்னை தயார் படுத்திக் கொள்வேன். 

1999–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது எனது தந்தையை இழந்தேன். இது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. 

இவ்வாறு தெண்டுல்கள் கூறினார்.

0 comments:

Post a Comment