மிடில் ஆர்டரில் களம் இறங்க சேவாக் விருப்பம்



இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிரடி வீரராக திகழ்பவர் சேவாக். அவர் சமீபகாலமாக சரியாக விளையாடததால் கிரிக்கெட் வாரியம் அவரை ஒதுக்கி வருகிறது. 

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நடுத்தர வரிசையில் விளையாட விருப்பம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2-வது மற்றும் 3-வது 4-நாள் போட்டிக்கான இந்திய 'ஏ' அணியில் சேவாக் இடம் பெற்றுள்ளார். இந்திய அணி தேர்வாளர் சந்தீப் பட்டீல், சேவாக்கை தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்துள்ளார்.

35-வயதை நெருங்கும் சேவாக் சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓரங்கட்டுப்பட்டு வருகிறார். சேவாக்குக்குப் பதிலாக தொடக்க வீரராக களம் இறங்கிய தவான் சிறப்பாக விளையாடி வருகிறார். 

இதனால் சேவாக் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். கடைசியாக சேவாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் விளையாட இருக்கிறது. அப்போது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் களம் இறங்கி விளையாட சேவாக் விருப்பம் தெரிவித்தள்ளார்.

இதற்குக் காரணம் ஆஸ்திரேலியா இந்தியா வந்தபோது காம்பீர் மற்றும் சேவாக் ஆகியோருக்குப் பதிலாக களம் இறங்கிய தமிழக வீரர் முரளி விஜய்- தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 

மேலும், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது கடைசி போட்டியில் தவான் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப்பதிலாக புஜாரா விளைடினார். இதனால் சேவாக் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்குவது முடியாத காரியம் ஆகிவிட்டது.

இதனால் மிடில் ஆர்டரில் விளையாட முயற்சி செய்து வருகிறார். தற்போது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. ரகானேவை மிடில் ஆர்டராக இறக்கினார்கள். 

ஆனால் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதேபோல் ரெய்னாவும் மிடில் ஆர்டரில் சோபிக்கவில்லை. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா அணியில் இடம்பெற்றாலும் சரியாக விளையாடுவாரா? எனத்தெரியவில்லை.

டிராவிட், லஷ்மண், கங்குலி ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் அந்த இடத்தை நிரப்ப சரியான வீரர்கள் இல்லை. அதனால் சேவாக் மிடில் ஆர்டரில் விளையாட போட்டியிருக்காது என்ற நிலையில் அதில் விளையாட விரும்புகிறார்.

0 comments:

Post a Comment