சாம்பியன்களுக்கு புது சோதனை



யு.எஸ்., ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் நடால், அமெரிக்காவின் செரினா ஆகியோர் தங்களது பரிசுத்தொகையில் பாதியை வரியாக செலுத்த வேண்டியுள்ளது.

 நியூயார்க்கில் "கிராண்ட்ஸ்லாம்' தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில், ஸ்பெயினின் ரபெல் நடால், உலகின் "நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெலாரசின் அசரன்காவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்றார். 

இந்த ஆண்டு நடந்த நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் யு.எஸ்., ஓபனுக்கு தான் பரிசுத் தொகை அதிகம். ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 23 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 

இத்தொகையில் பாதிக்குமேல் வருமான வரியாக செலுத்திய வேண்டியதால், சாம்பியன் பட்டம் வென்ற நடால், செரினாவுக்கு புது சோதனை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நடால் கூறுகையில், ""எப்போதும் விளையாட்டில் பரிசுத்தொகை முக்கிய பங்குவகிக்கும். இந்த ஆண்டு யு.எஸ்., ஓபன் தொடரின் பரிசுத்தொகையை அதிகரித்தற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆனால் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை என்பது நிலையானது கிடையாது. இத்தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் வரியாக செலுத்த வேண்டும். தவிர, பணத்தின் மதிப்பு நாட்டுக்கு நாடு மாறுபடுவதால் பரிசுத்தொகையும் ஏற்றத்தாழ்வை சந்திக்கிறது,'' என்றார்.

செரினா கூறுகையில்,""என் டென்னிஸ் வாழ்க்கையின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை சுமார் ரூ. 300 கோடியை தாண்டிவிட்டது என்று கேள்விப்பட்டேன். இதில் பாதியை வரியாக செலுத்திவிட்டேன். 

பரிசுத்தொகை விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். டென்னிசை மிகவும் நேசிப்பதால் எனக்கு பணம் முக்கியமல்ல,'' என்றார். 

0 comments:

Post a Comment