இந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்

பொழுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடர், பாலிவுட் நடிகை வித்யா பாலன் போன்றது,'' என, இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி விமர்சித்தார்.

பிரிமியர் லீக் "டுவென்டி-20' தொடரில் சூதாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பஞ்சமில்லை. இதனால், பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறுகையில்,"" டெஸ்ட் போட்டிதான் நமது பாரம்பரியம். இதனை காப்பாற்ற ஆர்வம் கொள்வதில்லை. 

இதை நினைக்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. பொழுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் ஐ.பி.எல்., தொடரை இந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்(பாலிவுட் கவர்ச்சி புயல்) என குறிப்பிடலாம்,'' என்றார்.

0 comments:

Post a Comment