ஐதராபாத் அணி போட்டியை பிக்சிங் செய்தேன் - சூதாட்ட தரகர் தகவல்

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீசார் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்தனர். 
இதில் சந்திரேஷ் ஷிவ்லால் பட்டேல் என்ற சூதாட்ட தரகர் பெயர் இடம் பெற்றுள்ளது. இவரை டெல்லி போலீசாரும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் கைது செய்து இருந்தனர்.

கடந்த ஜூன் 17–ந் தேதி சூதாட்ட தரகர் சந்திரரேஷ் பட்டேல் மும்பை போலீசிடம் வாக்கமூலம் அளித்து இருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஐதராபாத் அணி போட்டியை நானும், சில சூதாட்ட தரகர்களும் இணைந்து புனேயில் பிக்சிங் செய்தோம். 

இதற்காக ஐதராபாத் அணி வீரர்கள் திஷாரா பெரைரா, ஹனுமானா விகாரி, கரண் சர்மா, ஆசிஷ் ரெட்டி ஆகிய வீரர்களை சந்தித்தோம். 

ஆசிஷ் ரெட்டியின் சகோதரர் பிரீத்தம் ரெட்டி இதற்கு இடைத்தரகராக செயல்பட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment