அம்பயர்கள் முட்டாள்களா?: "டிவி' நிறுவனத்துக்கு எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ரசிகர்களுக்காக "ஹாட் ஸ்பாட்' தொழில் நுட்பத்தை "சேனல்-9' பயன்படுத்துவது, களத்தில் இருக்கும் அம்பயர்களை முட்டாள்களாக்கும் செயல் என விமர்சனம் எழுந்துள்ளது.

எதிர்வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்கவில்லை. தவிர, இங்கிலாந்து தொடரில் கிடைத்த "கசப்பான' அனுபவம் காரணமாக, "ஹாட் ஸ்பாட்' முறையும் வேண்டாம் என பி.சி.சி.ஐ., முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த "சேனல்-9' "டிவி' நிறுவன அதிகாரி பிராட் மெக்னாமரா,"" அம்பயர்கள் தவறு செய்தார்களா என்பதை அறிந்து கொள்ள, ரசிகர்களுக்காக மட்டும் "ஹாட் ஸ்பாட்' மூலம் சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் காண்பிக்கப்படும்,''என்றார்.

களத்தில் இருக்கும் அம்பயர் தரும் தீர்ப்பை ஏற்காமல், போட்டியாக வேறு ஒரு முடிவை ரசிகர்களுக்கு காட்டுவது, எல்லோரையும் குழப்பமடைய செய்யும். இது, தீர்ப்பு வழங்கிய அம்பயர்களை முட்டாள்களாக்கும் செயல் என, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


கிளார்க் ஆதரவு:

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,"" ஒரு தொடரில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விட்டு, அடுத்த தொடரில் நீக்குகின்றனர். இது என்ன முடிவு என்றே தெரியவில்லை.

இம்முறையை பயன்படுத்துவதில் அனைத்து கிரிக்கெட் போர்டுகளும், நிலையான முடிவு எடுக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) இவ்விஷயத்தில் தலையிட்டு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்,'' என்றார்.

0 comments:

Post a Comment